25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இனி 7 நாடுகளில் நாம் ( UPI ) யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இனி 7 நாடுகளில் நாம் ( UPI ) யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புரட்சிக்கு வித்திட்ட ஒரு அமைப்பு தான் யுபிஐ எனப்படும் யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ். சிறு வியாபாரத்தில் தொடங்கி, தனிநபர்களுக்கு இடையிலான பண பரிமாற்றம், பெரிய பெரிய கடைகளில் பொருட்களுக்கு பணம் செலுத்துவது என அனைத்தையும் எளிதாக்கிவிட்டது யுபிஐ.இந்தியாவில் யுபிஐ சேவையானது பீம் செயலி மற்றும் கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இனி இந்த யுபிஐ சேவையை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இந்தியாவின் யுபிஐ சேவைகள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் யுபிஐ சேவையை உலகமயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலும் இந்தியர்கள் எளிமையாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அண்மையில் இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் யுபிஐ சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு தான் யுபிஐ சேவைகளை பராமரித்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கேயும் யுபிஐ சேவைகளை பயன்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதன்முறையாக இந்தியாவின் யு பி ஐ சேவைகளை பயன்படுத்த அனுமதித்த நாடு பூடான் ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டு முதல், பூட்டானில் யுபிஐ சேவை பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பூடான், சிங்கப்பூர் , நேபாளம், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ,இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் எல்லாம் நாம் இந்தியாவில் பயன்படுத்துவதைப் போலவே யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News