25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்  கீழ் அரசு பள்ளி மாணவர்கள்  செல்லும் அறிவியல் களப்பயணத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் செல்லும் அறிவியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,  (05.07.2024) மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 50 மாணவர்களும், கீழடி அகழ்வாராய்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலுக்கு 100 மாணவர்களும், பந்தல்குடி சுற்றுச்சூழல் பூங்கா, தூத்துக்குடி ஸ்டெம் பார்க் மற்றும் துறைமுகத்திற்கு 100 மாணவர்களும்  செல்லும் அறிவியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக (05.07.2024) திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 50 மாணவர்களும், கீழடி அகழ்வாராய்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலுக்கு 100 மாணவர்களும், பந்தல்குடி சுற்றுச்சூழல் பூங்கா, தூத்துக்குடி ஸ்டெம் பார்க்; மற்றும் துறைமுகத்திற்கு 100 மாணவர்களும் என மொத்தம் 250 மாணவர்கள் அறிவியல் களப்பயணம் செல்லும் 5 சுற்றுலா பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரோவின் முக்கிய மையமான திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில்( VSSC ) ஏவுகணை வடிவமைப்பு, உந்துசக்திகள், திட உந்துவிசை தொழில்நுட்பம், காற்றியக்கவியல், காற்றியக்க கட்டமைப்பு மற்றும் காற்று வெப்ப அம்சங்கள், ஏவியனிக்ஸ், கணினி மற்றும் தகவல், இயந்திரவியல் போன்ற தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை குறித்தும்,மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 3.5 இலட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகள் நூல், சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள், தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் , போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி, பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல், ஒலிநூல், மேற்கோள் நூல்கள் குறித்தும்,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மை, நாகரீகம், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள கட்டிட அமைப்புகள், கட்டடகலை,  தொழிநுட்பங்கள் குறித்தும்,தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்காவில் மனிதனின் பரிணாம வளர்ச்சி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவு மையத்தில் ராக்கெட் ஏவுதல மாதிரி, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் உருவங்கள், அறிவியலில் இயற்பியல் கணக்குகளை செய்முறையாக செய்வது குறித்த மாதிரிகள், புவி வெப்பமாதல் உள்ளிட்ட பாதிப்புகளை விளக்கும் டிஜிட்டல் அரங்குகள், மாணவர்களுக்கு திரை காட்சிகள் மூலம் அறிவியல் குறித்து அறிவை வளர்ப்பதற்கான நவீன டிஜிட்டல் திரையரங்குகள் ஆகியவற்றையும்,பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல் மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாப்பது குறித்தும், பறவையினங்கள், பூச்சினங்கள், பட்டாம்பூச்சி இனங்கள் என காடுகளில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவை எவ்வாறு மனிதன் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை குறித்தும் மாணவர்கள் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் இந்த அறிவியல் களப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இந்நிகழ்வின் போது, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News