25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தமிழ்நாடு நாளையொட்டி   தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும்  பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு நாளையொட்டி   தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும்  பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள்

தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள்  ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.

இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 ஆம் நாள் முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் நடத்தப்பட்டன.

கட்டுரைப் போட்டிகளுக்கு வீரார்பட்டி அரசு  மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.மு.கூடலிங்கம், மலைப்பட்டி அரசு  மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி ப.ரேணுகாதேவி, விருதுநகர் கே.வி.எஸ்  மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு. ஞா. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாகப்   பணிபுரிந்தனர்.

பேச்சுப்போட்டிகளுக்கு, இராசபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.இரா.மாரியப்பன், நடுவப்பட்டி  அரசு  மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.வே.இராமர், ஆனைக்குளம் அரசு  மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி த.இ.முல்லைக்கொடி ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.       

கட்டுரைப்போட்டியில் இராசபாளையம் கேசா டிமிர் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நா.தியாஸ்ரீ முதல் பரிசாக ரூ.10000/-, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ந.ஜெயரதி காமாக் இரண்டாம் பரிசாக  ரூ.7000/-, சிவகாசி, எஸ்.என்.எம். பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. தர்ஷா   மூன்றாம் பரிசாக ரூ.5000/- வென்றனர்.

பேச்சுப்போட்டியில்  மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆ.முனீஸ்வரன் முதல் பரிசாக ரூ.10000/-, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்.ஷேரன் பிரின்ஸஸ்  லிடியா இரண்டாம் பரிசாக  ரூ.7000/-, க.மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கா.கவிலன் மூன்றாம் பரிசாக ரூ.5000/- வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட நூலக அலுவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ம.சுசிலா  அவர்கள்  மேற்கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News