சோதனைகளை கடந்து சாதிக்கின்ற பிரணவ் சூர்மாவின் நம்பிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்க உள்ளது இந்தியா சார்பில் 84 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இவர்களது வாழ்க்கை பயணம் கடினமானது. மனஉறுதியுடன் சோதனைகளை கடந்து சாதிக்கின்றனர்.
ஹியானாவின் பரிதாபாத்தை சேர்ந்தவர் பிரணவ் சூர்மா வயது 29 இவரது 16-வது வயதில் 2011-ம் ஆண்டு பெரும் சோகத்தை சந்தித்தார். வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழ இடிபாடுகளில் சிக்கினார். தண்டுவடம் பாதிக்கப்பட, நடக்க முடியவில்லை. பின் வீல்சேரில் வாழ்க்கையை தொடர்ந்தார். மனம் தளராமல் போராடினார். பி.காம் முடித்தார் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பரோடா வங்கியில் துணை மேனேஜர் ஆனார்.
உலக விளையாட்டு அரங்கில் என் பெயரை ஒலிக்க செய்யவும். பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், பாரிஸ் பாராலிம்பிக் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்வேன். பதக்கத்துடன் இந்தியா திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார் .
சின்க்பீல்டு செஸ் கோப்பை -பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டம் டிரா
அமெரிக்காவில் நடக்கும் சின்க்பீல்டு கோப்பை செஸ் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். 62-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிரா ஆனது.
0
Leave a Reply