தோல் நோய்களுக்கு பூவரசு இலை
சந்தனத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத், தேகம் முழுவதும் பூசி வந்தால்,அதிகப்படியான சூட்டினால் மேல் தோலில் காணப்படும் சிறு சிறு சிரங்குகள் குணமாகும்.மேல் தோலில் அக்கி, சொறி, தேமல், நமைச்சல் இருந்தாலும் குணமாகும்.
பூவரசு இலைகளுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. இதன் இலையை அரைத்து, சொறி சிரங்கு, தேமல் போன்ற தோல்
நோய்களுக்குப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். பூக்களை அரைத்து, புண்களின் மீது பூசினாலும் பலன் கிடைக்கும். பூவரசு காய்களில் உள்ள மஞ்சள் நிற பால் சரும நோய்களுக்கும், எச்சில் தழும்புகளுக்கும் பூசினால் குணமாகும். பூவரசு இலைகள், பூக்கள், காய் ,அனைத்தும் தோல் நோய்க்கு சிறந்த நிவாரணியாகும்..
0
Leave a Reply