இராஜபாளையம் நகர சாலைகள் சரக்கு வண்டிகளால் பாதிப்பு
நம் நகரில் மேம்பாட்டு பணிகள், ரயில்வே பாலம், பாதாள சாக்கடை, தாமிரபரணி நீர்வழித்தடம் போன்ற பணிகளால் ரோடு ரோடாகவே இல்லை. குண்டும், குழியுமாக தோண்டி, மூடாமல் பாதைகளை சீரழித்து உள்ளனர். இவற்றில் சரக்கு லாரிகள் கடைகளுக்கு முன்பு நிறுத்தி சரக்கை இறக்கி வருகின்றனர். இதனால் வேறு சாலை போக்கு வரத்தில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இந்த அதிக நெருக்கடிகளை சமாளிக்க சரக்கு வண்டிகள் மதியம் 1 மணியிலிருந்து 4 மணி வரை வர அனுமதித்து மற்ற நேரங்களில் தடை செய்யலாம். இவற்றை போக்குவரத்து போலிஸார், நகராட்சி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜபாளையம் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply