இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் பயணிகள் ரோட்டில் நிற்கும் அவலம்.
பழமையான கட்டடங்களினால் ஆபத்து ஏற்படும் காரணம் கூறி, ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள், இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. ஒரு ஆண்டிற்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்புடன் தொடங்கி ,இடையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காகன பயணிகள், மாணவிகள், நோயாளிகள், நின்று செல்லும் பகுதிகளுக்கு அடிப்படை வசதியான குடிநீர், போலிஸ் பாதுகாப்பு, மின்விளக்கு, கழிப்பறை, நேர தகவல் பலகை அமைத்து தருவதுடன் சுற்றுப்பகுதியை சுகாதாரமாக வைக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் படி பழைய பஸ்டாண்ட் பணிகளை வேகப்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
0
Leave a Reply