25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செங்கமலபட்டி தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செங்கமலபட்டி தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகாசி வட்டம், செங்கமலபட்டி தனியார் பட்டாசு தொழிற்சாலையில் (09.05.2024) அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.30 இலட்சம் நிவாரணத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (18.06.2024)  வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிவகாசி வட்டம், செங்மலப்பட்டியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் 09.05.2024 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தால், வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகைகள் இன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் மத்தியசேனை கிராமத்தைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி முத்துச்செல்வி என்பவருக்கும், வி.சொங்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.காளிஸ்வரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி முருகேஷ்வரி என்பவருக்கும், ரிசர்வ் லயன் காந்தி நகரைச் சேர்ந்த திருமதி முத்து என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.மச்சக்காளை என்பவருக்கும்,
ரிசர்வ் லயன் காந்தி நகரைச் சேர்ந்த திருமதி ஆவுடையம்மாள் என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.மாயாண்டி என்பவருக்கும், ரிசர்வ் லயனைச் சேர்ந்த திருமதி லட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.வேலுச்சாமி என்பவருக்கும், கோபுரம் காலனியைச் சேர்ந்த திருமதி வசந்தி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.இந்திரசக்தி என்பவருக்கும், மத்தியச்சேனையைச் சேர்ந்த திருமதி வீரலட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (சகோதரர்) திரு.வெள்ளைச்சாமி என்பவருக்கும்,  இந்திரா நகரைச் சேர்ந்த திருமதி ஜெயலட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கண்ணன் என்பவருக்கும், இந்திரா நகரைச் சேர்ந்த திரு.அழகர்சாமி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி பாப்பாத்தி என்பவருக்கும், சின்னையாபுரத்தைச் சேர்ந்த திரு.விஜயகுமார் என்பவரின் வாரிசுதாரரான (தாயார்) திருமதி ருக்மணி என்பவருக்கும் என உயிரிழந்த 10 நபர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30  இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News