இராஜபாளையத்தில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள்.
இராஜபாளையம் நகரில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.இராஜபாளையம் பெரியகடைபஜார் தெருவில் ரோடு வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் பூங்கா முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஏணிகடைகள், ரோட்டில் அமைந்துள்ள ,டி.பி.மில்ஸ் சாலை ஓரம் பழைய இரும்புக்கடை என பெரிய பட்டியலிடலாம்.
இதனால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. இதை யார் கவனிப்பார்கள். என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காமராஜர் நகரில் உள்ள ஹாஸ்பிடல் ரோடு, சாலை ஓரம் வேன்கள், லாரிகள், நிறுத்தி வைக்கப்படுகின்றன.நகராட்சியில்தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. செப்டிக்டேங்க் கிளின் செய்யும் வாகனங்களை தைரியமாக நிறுத்திவைக்கின்றனர். சுகாதாரக் கேடு விளைவிக்கும் செப்டிக்டேங்க் வண்டிகள் குடியிருப்புகள், ஹோட்டல்கள், இடையே நிறுத்தி வைப்பது சரியல்ல.இந்தப் பகுதியில் லாரிகளின் ,எதிரில் இருசக்கர வாகனங்கள் வரும் பொழுது, சாலை ஓரம் ஒதுங்க ,வாய்க்கால்களில் விழுந்து விடுகின்றன. இவை அடிக்கடி இங்கு நடைபெறுகிறது. இதை யாராவது சரி செய்வார்களா ? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply