25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவுகளை  ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவுகளை ஆய்வு

மக்களைவத் தேர்தல் -2024 யை முன்னிட்டு  (19.04.2024) விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குபதிவு மையங்களிலும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 311 வாக்குபதிவு மையங்களிலும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குபதிவு மையங்களிலும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 277 வாக்குபதிவு மையங்களிலும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 256 வாக்குபதிவு மையங்களிலும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குபதிவு மையங்களிலும்,  என மொத்தம் 1860 வாக்குசாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 188 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிக பெண் வாக்காளர்கள் உள்ள பகுதிகளில், பெண்களுக்கென்று தனித்துவமாக தலா 1 வாக்குச்சாவடி மையம் என மொத்தம் 7 பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் முழுவதும் பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்குபதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்திரிய மகளிர் நடுநிலைப் பள்ளி, வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி,  திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கள்ளிக்குடி மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சிவரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருநகர் சி.எஸ்.இராமாச்சாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநகர் முத்துத்தேவர் முக்குளத்தோர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும்,

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியான படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும்  வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றுவரும் வாக்குபதிவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News