மனிதர்களுக்கு இயற்கையின் ஒரு சிறிய புழு தரும் அழகான படைப்பு பட்டுத் துணிகள்.
பட்டு நூலை பெற பட்டுப்புழுக்கள் செயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. இதற்கென்று மல்பெரி பட்டுப்புழு, காற்றோட்ட பட்டுப்புழு, ராட்சத பட்டுப்புழு என்று பல்வேறு புழுக்கள் உள்ளன. பட்டுப்புழு விவசாயிகள், முட்டைகளை வாங்கி தகுந்த சூழ்நிலையில் வளர்த்து குஞ்சு பொரிக்கும் வகையில் தயார் செய்கின்றனர். முட்டையில் இருந்து கம்பளி பூச்சிகள் வெளிவந்ததும் அவற்றுக்கு மல்பெரி இலைகளை உணவாக அளித்து மூங்கில் தட்டுகளில் வைத்து வளர்க் கின்றனர்.இந்த கம்பளி பூச்சிகள் அந்த மூங்கில் தட்டில் ஒரு கூட்டை உருவாக்க ஒரு அறை போன்ற சூழலை உருவாக்குகிறது.
இது வலைப் பின்னல் போல கூட்டை உருவாக்குகிறது. இதனை கொக்கூன் என்கிறார்கள். பட்டுக்கூடு செயல்பாடு முடிந்த நிலையில் பட்டு இழை உற்பத்தி நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து, பட்டு இழைகளை பிரிக்க கொக்கூன்களை பிரித்து பட்டு இழைகளை தனியாக பிரித்து பட்டுநூலாக உருட்டுகிறார்கள். இந்த பட்டு நூல் கொண்டு பட்டு ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.
பண்டிகைகள், விழாக்கள் என்றால் பட்டுத்துணிகள் முக்கிய இடம் பெறுகின்றன. உலக அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா, சீனா. அரே பியா, பிரான்சு, இத்தாலி போன்ற சில நாடுகள் தீவிரமாக இயங்குகின்றன. இந்தியாவில் பட்டு உற்பத்தி மையங்களாக அசாம், பஞ்சாப், காஷ்மீர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கர்நாடகம் மிகப்பெரியபட்டு உற்பத்தி மாநிலமாக திகழ்கிறது. இதில் மைசூரு நகரானது குறிப்பிடத் தக்க பங்களிப்பை அளிக்கிறது
0
Leave a Reply