25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மனிதர்களுக்கு இயற்கையின் ஒரு சிறிய புழு தரும் அழகான படைப்பு பட்டுத் துணிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனிதர்களுக்கு இயற்கையின் ஒரு சிறிய புழு தரும் அழகான படைப்பு பட்டுத் துணிகள்.

பட்டு நூலை பெற பட்டுப்புழுக்கள் செயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. இதற்கென்று மல்பெரி பட்டுப்புழு, காற்றோட்ட பட்டுப்புழு, ராட்சத பட்டுப்புழு என்று பல்வேறு புழுக்கள் உள்ளன. பட்டுப்புழு விவசாயிகள், முட்டைகளை வாங்கி தகுந்த சூழ்நிலையில் வளர்த்து குஞ்சு பொரிக்கும் வகையில் தயார் செய்கின்றனர். முட்டையில் இருந்து கம்பளி பூச்சிகள் வெளிவந்ததும் அவற்றுக்கு மல்பெரி இலைகளை உணவாக அளித்து மூங்கில் தட்டுகளில் வைத்து வளர்க் கின்றனர்.இந்த கம்பளி பூச்சிகள் அந்த மூங்கில் தட்டில் ஒரு கூட்டை உருவாக்க ஒரு அறை போன்ற சூழலை உருவாக்குகிறது.

இது வலைப் பின்னல் போல கூட்டை உருவாக்குகிறது. இதனை கொக்கூன் என்கிறார்கள். பட்டுக்கூடு செயல்பாடு முடிந்த நிலையில் பட்டு இழை உற்பத்தி நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து, பட்டு இழைகளை பிரிக்க கொக்கூன்களை பிரித்து பட்டு இழைகளை தனியாக பிரித்து பட்டுநூலாக உருட்டுகிறார்கள். இந்த பட்டு நூல் கொண்டு பட்டு ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.

பண்டிகைகள், விழாக்கள் என்றால் பட்டுத்துணிகள் முக்கிய இடம் பெறுகின்றன. உலக அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா, சீனா. அரே பியா, பிரான்சு, இத்தாலி போன்ற சில நாடுகள் தீவிரமாக இயங்குகின்றன. இந்தியாவில் பட்டு உற்பத்தி மையங்களாக அசாம், பஞ்சாப், காஷ்மீர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கர்நாடகம் மிகப்பெரியபட்டு உற்பத்தி மாநிலமாக திகழ்கிறது. இதில் மைசூரு நகரானது குறிப்பிடத் தக்க பங்களிப்பை அளிக்கிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News