25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாடி தோட்டம் போடுபவர்கள்   செடிகளை பராமரிக்க  சில குறிப்புகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாடி தோட்டம் போடுபவர்கள்  செடிகளை பராமரிக்க சில குறிப்புகள்

மாடி தோட்டம் போடுபவர்கள் என்றில்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய இடங்களிலும், தொட்டியில் காய்கறி செடிகளை வைத்து பராமரிப்பார்கள். சிலர் மொட்டை மாடியில் சிறிய அளவில் கார்டன் போல் பழங்கள், காய்கறிகள் என்று தொட்டியில் பயிரிட்டு வளர்ப்பார்கள். வயலாக இருந்தாலும் தொட்டியில் இருந்தாலும், செடிகளில் பூச்சி அரிப்பது நடக்க கூடியதுதான்.இதை தவிர்க்க செடி வைக்கும் போதேசரியான மண் பயன்படுத்த வேண்டும். வெறும் மண்ணை மட்டும் எடுக்க கூடாது. இது அதிக எடை கொண்டிருப்பதால் தொட்டியின் கனம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மாடிதோட்டம் போடுபவர்கள் வெறும் மண்ணை மட்டும் பயன்படுத்தவே கூடாது.

செடி வைக்கும் போது நான்கில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு கோகோ பீட் என்று சொல்லகூடிய தேங்காய் நார் துகள்கள், ஒரு பங்கு மக்கிய உரம், ஒரு பங்கு ஆற்று மணல் என்று நான்கையும் சம அளவு கலந்து பயன்படுத்த வேண்டும். தேங்காய் நார் துகள்களை இரண்டு முறை நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.செடிகளுக்கு செம்மண் எப்போதும் சிறந்தது என்றாலும் அந்த மண் கிடைக்காத நிலையில் மண்ணை வளப்படுத்த சில முறைகள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பகுதியில் கிடைக்கும் மண்ணை எடுத்து, அதில் இருக்கும் பெரிய கற்களை அகற்றி, மண்ணை சுத்தம் செய்யவும். பிறகு அதை பயன்படுத்த வேண்டும்.செடி வைக்கும் போதே, மண்ணில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு பொடியை கலந்து விட்டால் விதைகளோ, வேரோ நன்றாக பற்றிக்கொள்ளும். மண்ணுக்கு சமமாக மணல் சேர்ப்பது நல்லது. இல்லையெனில் ,இது வேர்பகுதியை இருக்கி கட்டியாக்கிவிடும்.
கீரைகளோ, காய்கறிகளோ, பழச்செடிகளோ அதற்கேற்ப மண்ணை நிரப்ப வேண்டும்.  சிறிதாக செடிகளை வளர்க்க செய்யலாம். அப்போதுதான் எல்லாவற்றையும் கவனமாக பராமரிக்க முடியும். செடிகள் பட்டு போகாமல் பார்க்கமுடியும். இந்த குறிப்புகளை கவனமாக கடைப்பிடித்தாலே செடிகள் அருமையாக வளர்ந்திருக்கும். இப்போது செடிகள் வளர, வளர காய்களும், பூக்களும், பழங்களும் நிறைவாக கொடுக்க வேண்டும். அதோடு பூச்சிகளும் செடிகளை பற்றாமல் இருக்க வேண்டும். அதற்கான உரம் தயாரிப்பு குறித்து பார்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News