25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற்ற அரசு பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம் 2024
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற்ற அரசு பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம் 2024

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் அரசு பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்- 2024உண்டுஉறைவிடபயிற்சிமுகாமினைமாவட்டஆட்சித்தலைவர்முனைவர்வீ.ப.ஜெயசீலன்,IAS.,அவர்கள்(05.05.2024)பார்வையிட்டுமாணவர்களிடையேஉரையாற்றினார்.

விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் 02.05.2024 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கோடைகால உண்டு, உறைவிடப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி திருவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம் பொறியியல் கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 100 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாமும், 100 மாணவர்களுக்கு ஓவியக்கலை பயிற்சி முகாமும்,

விருதுநகர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 50 மாணவர்களுக்கு இசை, பாடல் பயிற்சி முகாமும்,சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 50 மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி முகாமும், செவல்பட்டி பி.எஸ்.ஆர் கல்லூரியில் 04.05.2024 முதல் 13.05.2024 வரை சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாமும் நடைபெற்று வருகிறது.இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 03.05.2024 முதல் 07.05.2024 வரை நடைபெற்று வரும் முகாமில் 100 மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி வகுப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் வேண்டும் என்றால் அதற்கு காடுகளில் 33 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த காடுகளில் பூச்சிகள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் சமநிலையில் இருந்தால் தான் உணவு சங்கிலி சமநிலையாக இருக்கும். இந்த சுற்றுச்சூழலில் ஓர் உயிரை அழிக்கும் போது, இன்னொரு உயிரின் பெருக்கம் அதிகமாகி, அதனால் இயற்கை பாதிப்பு ஏற்படுகிறது.

நம்முடைய உணவு, காய்கறி தேவைகளுக்கு பூச்சிகள் மிகவும் அவசியம். இயற்கையை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை.இயற்கையை பாதுகாப்பது குறித்த சிந்தனை உள்ள மாணவர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்பதற்கான இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.எனவே, மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தாலும் இயற்கை குறித்த புரிதலோடு, மற்றவர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 இப்பயிற்சியில் மாணவர்களுக்கு கருத்தாளர்களாக பணியாற்றிய ROAR மற்றும் ATREE தன்னார்வ  அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.து.தங்கமாரியப்பன், கல்லூரி முதல்வர், பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News