25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்தியாவிற்கு வரும் Tesla எலக்ட்ரிக் கார்.,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவிற்கு வரும் Tesla எலக்ட்ரிக் கார்.,

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் இந்தியாவிற்கு மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முயற்சியைத் தொடங்க உள்ளூர் கூட்டாளரைத் தேடுகிறது.சமீபத்தில்,NorgesBankInvestmentManagementஇன்CEO,NikolaiTangen, தனதுX சமூக ஊடக தளத்தில்'Spaces' கூட்டத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.XSpacesஇல்சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில், எலோன் மஸ்க், மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் அதன் பெருகிவரும் மக்கள்தொகையின் காரணமாக மின்சார கார்கள் அவசியம் என்று வலியுறுத்தினார்.தகவல்களின்படி,EV நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன்() கூட்டு முயற்சியின் கீழ் இந்தியாவில்Tesla உற்பத்தி வசதியை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்தியாவில் ரூ.16,697 கோடி மதிப்பிலான ஆலையை ஆய்வு செய்ய டெஸ்லா நிறுவனம் ஒரு குழுவை அனுப்புகிறது.

இந்தியாவுக்கு (India) ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் (Germany) உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் ஆலையில் மகிழுந்து உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது.இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்தியாவுக்கான மகிழுந்து ஏற்றுமதி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.உலகின் மூன்றாவது பெரிய மகிழுந்து சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில், டெஸ்லா விரைவில் களமிறங்கவுள்ளது.இதற்காக சுமார் 2 பில்லியன் டொலர் பணத்தை டெஸ்லா முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.இந்தியாவில் மகிழுந்து உற்பத்தி ஆலை அமைப்பதற்குப் பொருத்தமான தளங்களை ஆய்வு செய்வதற்காக டெஸ்லாவின் குழு இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சில மின்சார வாகனஉற்பத்தியாளர்களின்இறக்குமதி வரியைக் குறைக்க முன்வந்தது.

இந்தியாவில் குறைந்தபட்சம் 500 மில்லியன் டொலர் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால், வரி குறைப்பு செய்யப்படும் என மத்திய அரசு கூறியது.டெஸ்லா நிறுவனம் பல மாதங்களாகஇந்தியாவின் இறக்குமதி வரி வீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இந்த சலுகையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.டெஸ்லா எந்த வகையான மகிழுந்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.ஜெர்மனியின் பெர்லினுக்கு அருகிலுள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையில் வை (Y) வகை மகிழுந்து மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவின் புதிய கொள்கையின்படி, வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வரி வீதத்தில் ஆண்டுக்கு 8 ஆயிரம் கார்களை இறக்குமதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News