ஐ.சி.சி சார்பில் பெண்களுக்கான 9-வது T-20 உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.
ஐ.சி.சி சார்பில் பெண்களுக்கான 9-வது T-20 உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த 'A' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்திய அணியின் அபார பந்து வீச்சில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. ரேணுகாசிங் வேகத்தில் குல்பெரோசா (0) போல்டானார். அமின் (8) ஓமைமா (3) நிலைக்கவில்லை. முனீபா அலி, 17 ரன்னுக்கு வெளியேற, 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 58 ரன் எடுத்து தத்தளித்தது.
பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன் மட்டும் எடுத்தது. இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்தது. இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தீப்தி சர்மா (7) சஜனா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
0
Leave a Reply