25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


குழந்தைகள் தின விழாவின் முத்தாரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தைகள் தின விழாவின் முத்தாரம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 , 7 மற்றும் 8  ஆம் வகுப்பு மாணவர்களிடம்  உரையாட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்  மாநிலச் செயலாளர் கண்மணிராசா வந்திருந்தார். தன்னை மாணவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட பின் அவர்கள் அனைவரின் பெயரையும் ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். அவர்களில் ஒருவர் பெயர் தமிழரசு.அந்த மாணவனின் பெற்றோருக்கு தமிழ் மொழியின் மேல் உள்ள விருப்பத்தால் வைத்திருக்கலாம் என்று கூறினார் இன்னொரு மாணவனின் பெயர் வசந்தன். இராஜபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகியின் பெயரை வைத்திருக்கலாம் என்றுக் கூறினார்.இதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டதற்கு, வல்லபாய் படேல், வ.உ. சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், திருப்பூர் குமரன், மகாகவி பாரதியார், நேரு, காந்தி என்ற பெயர்களை மாணவர்கள் சொன்னதும் வியந்து மகிழ்ந்தார். இதற்கு அடுத்து நம்முடைய விளையாட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா? எனக் கேட்க மாணவர்கள் ஒவ்வொரு விளையாட்டின் பெயரை சொல்லிக் கொண்டு வந்தனர். முதலில் கல்லா? மண்ணா? என்ற விளையாட்டில் என்ன சொல்லி விடுவீர்கள் என கேட்டபோது அவர்கள் தெரியாமல் திகைக்கஉம் மண்ணிலே நிற்கிறோம் உலக்கரிசியை திங்கிறோம்'  என்னை உன்னால தொட முடியலை இதே மாதிரி எம் மண்ணையும் உன்னால தொட முடியாது என்பதற்கான அர்த்தம் இது என்று கூறினார். இவ்விளையாட்டின் மூலம் மண்ணின் மீதும் நாட்டின் மீதும் ஒரு பற்றினை உருவாக்கும் அற்புதம் பொதிந்து உள்ளது என்றார். 'பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம் என்ன பூ பறிக்கிறீர்கள் என்ன பூ பறிக்கிறீர்கள் எனக் கேட்பது உங்களுடைய பொருளை உங்கள் அனுமதியின்றி எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறது.அடுத்து திருடன் போலீஸ் விளையாட்டை பற்றிக் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டதும் மாணவர்கள் மத்தியில் ஒரே குதூகலம். திருடனாய் இருந்தால் போலீசிடம் இருந்து தப்பிக்கலாம். ஓடி ஓடி ஒளியலாம், அலைக்கழிக்கலாம் என்றார். இது ஒரு மிகுந்த உற்சாகமான விளையாட்டாக மாணவர்கள் எண்ணிக் களித்தனர். 'மலையிலே தீப்பிடிக்குது பிள்ளைகளே ஓடி வாங்க' இதற்கு அர்த்தம் கூறியது அதிசயமாக இருந்தது. தீப்பிடித்தால் மரங்கள் விழுந்து விடும், வளம் குறைந்து விடும் , விரைந்து வாருங்கள். உங்களுக்கான மலையை நீங்கள் தான் காக்க வேண்டும் என்று பொருள்படும்படி கூறினார். இப்படி பல விளையாட்டுகளிலும் ஒரு வியக்கத்தக்க பின்னணி உள்ளது என்பதை மாணவர்கள் உணர்ந்தனர். உண்மையிலேயே இந்த நிகழ்ச்சி மிகச்சிறந்த உரையாடலாக அமைந்தது. மாணவர்களின் ஆர்வம் உற்சாகம் அளவிடற்கரியதாக அமைந்துவிட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News