முந்தேசுசுவரி தேவி கோயில் (The Mundeshwari Devi Temple)
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருக்கும் ஒரு கோவிலாகும். இம்மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் உள்ள கவுரா என்ற பகுதியில் இருக்கும் முந்தேசுவரி மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.இது பீகாரில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும், இது சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கணக்கின்படி இந்த ஆலயம் கிபி108 ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தது. இது உலகில் பயன்பாட்டிலுள்ள பழமையான கோயிலாகவும் கருதப்படுகிறது
இறைவன் சிவன் மற்றும் சக்தியை வழிபடும் புனித தலமாக அர்பணிக்கப் பட்டுள்ள இக்கோவில் இந்தியாவின் மிகவும் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.பண்டைய காலத்திலிருந்து இன்றும் கூட செயல்பட்டுவரும் மிகப்பழமையான கோவில் என்றும் இதைக் கருதுகிறார்கள்.இக்கோவில் கி.பி.625 ஆம் ஆண்டு கட்டப்பட்டதென இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் அமைத்த தகவல்பலகை தெரிவிக்கிறது.இதை உறுதிபடுத்தும் வகையில் கி.பி.625 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் இக்கோவிலை ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக 1915 ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வருகிறது
பாட்னா, கயா அல்லது வாரணாசி ஆகிய ஊர்களின் சாலை வழியாக முந்தேசுவரி கோவிலைச் சென்றடைய முடியும் மோகனியாபாபுவா சாலை இரயில் நிலையம் கோயிலுக்கு அருகில் உள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையத்திலிருந்து22 கிலோமீட்டர் தொலைவை சாலை வழியாகக் கடந்து கோயிலை அடையலாம். வாரணாசி நகரத்திலுள்ள லால் பகதூர் சாசுத்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம், இக்கோயிலுக்கு மிக அருகிலுள்ள விமான நிலையமாகும். இவ்விமான நிலையம் கோயிலிலிருந்து 102 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
0
Leave a Reply