25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தோட்டத்தில் காய்கறிகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தோட்டத்தில் காய்கறிகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்

வீட்டு கிச்சன் தோட்டத்தில் நம்மிடம் இருக்கும் மறுசுழற்சி செய்யக்கூடிய திறமையைப் பயன்படுத்தி நாம் விரும்பும் வகையில் பலவகையான காய்கறி தாவரங்களை வளா்க்க முடியும். அதன் மூலம் நமது பணத்தை சேகாிக்க முடியும். வீட்டை சல்லடை போட்டு தேடி ஏற்கனவே பயன்படுத்திய கேன்களைக் கண்டுபிடித்து அவற்றை நகைச்சுவை உணா்வுடன் அலங்காித்து வைக்கலாம். அதோடு வீட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்து அவற்றை மறுபடியும் பயன்படுத்துதல், குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகிய குறிப்புகளைப் பயன்படுத்தி நமது கிச்சன் வீட்டுத் தோட்டத்தை புதுமையாக அமைக்கலாம்.வீட்டுத் தோட்டத்தை முறையாக அமைப்பது முக்கியம் பெட்டகங்கள், தொட்டிகள் மற்றும் பானைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தை அமைத்தால் அது பாா்ப்பதற்கு சீராக மற்றும் அழகாக இருக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அவை நாம் விரும்பும் வாிசையில் அடுக்கி வைக்க உதவியாக இருக்கும். நம்மிடம் இருக்கும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி ஒரு பானையில் பல தாவரங்களை வைத்து தோட்டம் அமைக்கலாம். அதன் மூலம் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான தாவரங்களை வளா்க்க முடியும்.பல வண்ண தாவரங்களைத் தோ்ந்தெடுத்தல் நமது வீட்டுத் தோட்டமானது ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்க வேண்டும். எனவே பாா்ப்பதற்கு அழகாக இருக்கும் மற்றும் பல வண்ணங்களில் இருக்கும் தாவரங்களை வளா்த்தால் நமது தோட்டம் மிகவும் ரம்மியமாக இருக்கும்.

உங்கள் வீடு ஊருக்கு தொலைவில் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டில் ஒரு சிறிய காய்கறி தோட்டம் அமைத்துக் கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு இது சற்றே கடினமான விஷமாக இருக்கும். அதற்கு காரணம், பெரிய நகரத்தில் உள்ள பலரும் அடக்கு மாடு குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இதனை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் வீட்டின் மூலையில் இருக்கும் அந்த பச்சை தோட்டம், சோர்வடைந்து வரும் கண்களுக்கு ஆதரவாக இருக்கும்.காய்கறி தோட்டம் வளர்ப்பது அவ்வளவு கஷ்டமா என்ன? கண்டிப்பாக இல்லை. அதற்கு தேவையானது எல்லாம் முடியும் என்ற எண்ணமும், சிறிது நேரமும் மட்டுமே. ஏன் நீங்களும் ஒரு காய்கறி தோட்டத்தை வளர்க்கக் கூடாது? உங்கள் செடிகள் காய்களையும், பழங்களையும் அளிக்கும் போது, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது. சரி எப்படி தான் காய்கறி தோட்டத்தை வளர்ப்பது? அதற்கு நீங்கள் சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ள வேண்டும்நீங்கள் ஒரு கைத்தேர்ந்த தோட்டக்காரர் என்றால், கிடைக்கின்ற சின்ன இடத்தில் எப்படி காய்கறிகளை வளர்ப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தொடக்க முயற்சியாக இதில் நீங்கள் ஈடுபட்டால், காய்கறி தோட்டம் அமைப்பதும் கூட உங்கள் வாழ்க்கையின் ஒரு கற்கும் அனுபவமாக மாறி விடும்.

நீங்கள் புதிதாக ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் முதலில் சிறியதாக ஆரம்பியுங்கள். வளரும் காய்கறிகளை நீங்கள் விற்க போவதில்லை. அதனால் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சரி, எந்த காய்கறிகளை சுலபமாக பராமரிக்கலாம்? உருளைக்கிழங்கு, முள்ளங்கி, புதினா, மல்லிச்செடி, குடை மிளகாய் போன்றவற்றில் இருந்து தொடங்கலாம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.இடத்தை தேர்வு செய்யுங்கள் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன் உங்களுக்கு தேவையான முதல் விஷயம் இது தான். செடிக்கு அதிகமாக தேவைப்படுகிற, வெயில் படுகிற ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். சாலட் இலைகளை வளர்த்தால், ஒரு வலையை மேலே போட்டு சற்று நிழலை உருவாக்கிடுங்கள். மண்ணானது ஈரப்பதத்துடன், வடிந்து செல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.இடத்தை தேர்வு செய்த பிறகு, காய்கறிகள் வளர்ப்பதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை தீர்மானியுங்கள். நீங்கள் இப்போது தான் தொடக்க நிலையில் உள்ளீர்கள். அதனால் செடிகளுக்கு முதலில் சிறிய இடத்தையே பயன்படுத்துங்கள். திறந்த வெளியாக இல்லையென்றால் ஒரே தொட்டியில் பல்வேறு வகையிலான மூலிகை செடிகளை வளர்க்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News