திருச்சுழி-அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கையின் தொடக்கம்
திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்காண மாணவர் நேரடி சேர்ககை 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுகிறது.இந்நிலையத்தில் பின்வரும் தொழிற்பிரிவுகளில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA), நில அளவையாளர் (SURVEYOR), மின்சார பணியாளர் (ELECTRICIAN), இயந்திர வேலையாள் (MACHINIST), ஆகிய நான்கு தொழில் பிரிவுகளிலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்ப்படுத்தி தரப்படும்.
விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா சீருடை(தையற்கூலியுடன்), விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் கூடுதலாக ரூ 1000/- வழங்கப்படும்.
எனவே, திருச்சுழி சுற்றுவட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98421-78028. 70100-40810. 95669-29663 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply