25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இயற்கையான முறையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க ....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையான முறையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க ....

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சுட்டெரிக்கும் சூரியன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது.எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் ஏசி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. என்னதான் ஏசி மாட்டினாலும் நீண்ட நேரத்திற்கு அவற்றைப் பயன்படுத்த முடியாது. இயற்கையான முறையில் வீட்டை எப்படியெல்லாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் .வீட்டைச் சுற்றி மரம் செடிகளை வளர்த்தால், வீடு எப்போதும் குளுமையாக இருக்கும். சூரிய வெப்பத்தை இவை தடுத்து விடுவதால்,இயற்கையான நல்ல குளுமையான சூழலை வீட்டில் நீங்கள் உணர முடியும்., கோடை காலங்களில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வையுங்கள். போதிய காற்றோட்ட வசதி இல்லாதவர்கள் வீட்டில்Exhaust Fan பொருத்துவது நல்லது. இது வீட்டில் உள்ள சூடான வெப்பக் காற்றை வெளியே தள்ள உதவும். 

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அடிக்கடி நீர் அருந்துவதால் உங்கள் உடலின் வெப்பநிலை சராசரியாகப் பராமரிக்கப்படும். இதனால் வெளிப்புற வெப்பம் உங்களை அதிகம் தாக்காமல் இருக்கும். வீட்டில் தேவை இல்லாமல் இயங்கி, வெப்பத்தைவெளியேற்றும் ஃபேன், பல்ப், பிரிட்ஜ், கணினி போன்றவற்றை அணைத்து விடுங்கள். அவற்றை அணைப்பது உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருக்கும்.வீட்டில் தேவையில்லாமல் அடைத்துக் கொண்டிருக்கும் சாமான்கள், காகிதங்கள், புத்தகங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி, வீட்டை முடிந்த அளவுக்கு காலியாக வைத்திருங்கள். இது, வெப்பம் உங்கள் வீட்டில் அதிகம் தேங்காமல் ,உங்கள் வீட்டில் காற்றோட்டம் அதிகமாகி எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். 

உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் பெயிண்ட் அடிப்பது, உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருக்க உதவும். அல்லது மொட்டை மாடியில் தென்னை ஓலை போட்டு அதன் மேல் நீர் தெளித்து வையுங்கள். இதன் மூலமாக வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த முறைகளைப் பின்பற்றி ஏசி இல்லாமலேயே உங்கள் வீட்டை கோடை காலத்தில் குளுமையாக வைத்திருக்க முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News