ப்ரிட்ஜில் காய்கறி ஸ்டோர் செய்ய...
காலிபிளவர் வெட்டிய பிறகு காற்று புகாத டப்பாவிலும், ப்ரோக்கோலி என்றால் வலை போன்ற பையிலும், முட்டைக் கோசை நறுக்கிய பிறகு நெகிழிப் பையிலும் போட்டு சேமித்துவைப்பது நல்லது. இந்தக்காய்கறிகள் ஈரப்பதத்தை எளிதில் இழக்காது என்றாலும் அதிக உணர்திறன் கொண்டவை .எனவே இதனை இப்படியே வைத்தால் மறுநாள் வரை புதிது போல இருக்கும்.
உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்ற வேர்ப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளை சேமித்து வைக்கும் பொழுது இதனை தண்ணீரில் போட்டு வைப்பது நல்லது. அப்பொழுதுதான் இதன் நிறம் மாறாமல் இருக்கும். நன்கு குளிர்ந்தபுதிய தண்ணீரில் இந்த காய்கறி களை போட்டு இறுக்கமாக மூடாமல் கொஞ்சம் காற்றோட்டமாக உள்ளபடி மூடி வைத்து விடுங்கள். மறுநாள் வரை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
கொத்தமல்லி, புதினா, கீரை போன்ற இலை வகைகளை குளிர் சாதன பெட்டியில் சேமித்து வைக்கும்பொழுது அதில் உள்ள அழுகிய இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் சேமித்து வைக்க வேண்டும்.இதனை காற்று புகாதவாறு சேமித்து வைப்பதை விட ஒரு காகித டிஷ்யூ கொண்டோ அல்லது மெல்லிய காட்டன் துணியை கொண்டு சுற்றி வைப்பது நல்லது. இதனை முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள்.
0
Leave a Reply