சாலைகளின் நடுவில் உள்ளமின்கம்பங்களால் போக்குவரத்து இடையூறு.
இராஜபாளையம் ஜானகிராம் மில் முதல் யூனியன் அலுவலகம் வரை மொத்தம் 287 மின் கம்பங்களும், 18 டிரான்ஸ்பார்மர்களும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொன்றும் 10 முதல் 30 அடி வரை சாலையை ஆக்கிரமித்து உள்ளன.
இராஜபாளையத்தில் ரோட்டை பெருமளவு ஆக்கிரமித்துள்ள மின் கம்பங்களை,கோர்ட் உத்தரவிட்டும், அகற்றுவதில் மின் வாரியத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் நடக்கும் பிரச்சனையால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண கோர்ட் உத்தரவிட்டும் மின்வாரியம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இரண்டும் தற்போது வரை காலம் தாழ்த்தி வருகிறது .என்று இப்பிரச்சனை சரியாகும்? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply