25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருச்சி வாலிபர் பாலமுருகன் இளம் வயது நீதிபதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சி வாலிபர் பாலமுருகன் இளம் வயது நீதிபதி

திருச்சியைச் சேர்ந்த23 வயதே ஆகும் வக்கீல் ஒருவர் நீதிபதியாக உள்ளார். திருச்சி மாவட்டம் குண்டூர் பஞ்சாயத்து அயன்புத்தூர் தான் இவரது சொந்த கிராமம். மாமுண்டி,விஜயா தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் பாலமுருகன். இவருக்கு பிரதீப் என்கிற ஒரு அண்ணனும், பிரியங்கா என்கிற சகோதரியும் உள்ளனர். சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. தாய், தந்தை இருவரும் விவசாயம் பார்த்து வருகின்றனர். பாலமுருகன், தனது ஆரம்பக் கல்வியை செம்பட்டு ஆபட் மார்சல் பள்ளியில் முடித்தார். மேல்நிலை கல்வியை திருச்சி ஜங்ஷன் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவோடு திருச்சி காஜாமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் திறம்பட சட்டம் பயின்றார். 

2022 ஆம் ஆண்டு கவுன்சிலில் வழக்கறிஞராக தனது பெயரை பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ணபாரதி மற்றும் வழக்கறிஞர் சாகர் ஆகியோரிடம் ஜூனியர் வழக்கறிஞராக 6 மாத காலம் பயிற்சி பெற்றார். பின்னர்2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வு எழுதினார். இதில், அவர் தமிழ்நாடு அளவில்33வது இடத்தையும் திருச்சி மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றார். பயிற்சிகாலத்திற்குப் பின்னர் அவர் நீதிபதியாக உள்ளார். இதுகுறித்து பாலமுருகனிடம் கேட்டபோது, தான்6வது படிக்கும் போதே வக்கீல் ஆக வேண்டும்என்ற கனவை மனதில் விதைத்து கொண்டதாகவும், தற்போது அந்த கனவு நனவாகி உள்ளதாகவும், பயிற்சிக்குப்பிறகுநீதிபதியானதும் ஏழை, பணக்காரர்என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கபாடுபடுவேன் என்று கூறினார். இவருடன் சேர்ந்துதேர்வு எழுதிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 பேர் நீதிபதியாகஉள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News