25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மினரல் வாட்டர் யூஸ் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மினரல் வாட்டர் யூஸ் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்ன?

பொழியும் மழையானது மலை உச்சிகளில் இருந்து சுனைகளாகி ஓடைகளாக உருமாறி ஓடைகள் ஒன்றிணைந்து பின் அருவிகளாக வீழ்ந்து ஆறுகளாகப் பயணம் செய்து ஆங்காங்கே அணைகளாக நின்று கால்வாய் வழியோடி குளங்கள் கண்மாய்களை நிரப்பிப் பின் ஆழியில் கலக்கின்றன. இந்த நீர் சுழற்சியில் நிலத்தடியிலும் நீர் சென்றடைகிறது. அதில் நன்னீரும் உண்டு. உப்பு நீரும் உண்டு. இவ்வாறாக வளர்ந்து முன்னேறிய நகரங்களில் கிராமங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலம் பருகுவதற்கான நன்னீர் - நிலத்தடி குழாய்கள் மூலம் வீடுகளை வந்து அடைகின்றன. இன்னும் பல இடங்களில் வறட்சி நிலவும் இடங்களில் /காலங்களில் மக்கள் ஆர். ஓ நீரைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. பெரும் தொழில் நிறுவனங்கள் முதல் பேரடுக்கு மாடிக் கட்டிடங்கள் வரை ஆர். ஓ நீர்க் குடுவைகளை நம்பி இருக்கும் சூழல் உள்ளது.

பல வீடுகளிலும் தங்களது சமையலறையில் ஆர். ஓ சாதனம் பொருத்தப்பட்டு அதில் இருந்து வரும் நீரைப் பருகும் சூழலும் உள்ளது. குடிப்பதற்கு ஒவ்வாத கார்ப்புச் சுவையில் உப்பு கலந்து இருக்கும் நீரை யாரும் அருந்துவதில்லை. இரண்டாவது அம்சம்- சுத்தமானதாக இருக்க வேண்டும். இந்த சுத்தத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று கண்ணால் காணும் சுத்தம். மற்றொன்று நுண்ணியிரிகளில்லாத சுத்தம் கண்ணால் காணும் போது தண்ணீரானது கலங்கல் இல்லாமல் எந்த மண் சேறு இல்லாமல் நிறமேதுமற்று இருக்க வேண்டும். மேலும் அவற்றுள் கலந்திருக்கும் அமிழ்த்தப்பட்டுள்ள மொத்த திடப்பொருட்களின் அளவுகள் ( TOTAL DISSOLVED SOLIDS)குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக இதைTDS என்று இனி அழைப்போம். இந்தTDS இல்- உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கனிமங்களான கேட்மியம், அஸ்பெஸ்டாஸ், ஈயம், இரும்பு போன்றவையும்- உடலுக்கு நுண்ணிய அளவில் தேவையான கனிமங்களான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும் அடங்கும். இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நீரின் டிடிஎஸ் அளவு லிட்டருக்கு500 மில்லிகிராம் அல்லது பிபிஎம் என்ற அளவுக்குள் இருப்பது பருகுவதற்கு உகந்ததாகும். உலக சுகாதார நிறுவனம் இந்தத் தரத்தை டிடிஎஸ் அளவுகள் ஒரு லிட்டருக்கு300 மில்லிகிராம் அல்லது பிபிஎம் என்ற அளவுக்குள் வைக்கக் கூறுகிறது.


இந்த பிபிஎம் அளவு குறைந்தபட்சம்50 மில்லிகிராம் அளவாவது பருகும் நீரில் இருக்க வேண்டும் என்ற நிர்ணயத்தையும் உலக சுகாதார நிறுவனம் வகுத்திருக்கிறது. விளைவாக கிட்டத்தட்ட எந்த கனிமங்களும் இல்லாத நீர் நமக்குக் கிடைக்கிறது. இந்த நீரில் உப்பு அறவே இருக்காது என்பதால் பருகுவதற்கு நல்ல சுவையில் இருக்கும்.மைக்ரோபயாலஜிகள் ஃபிட்னஸ் எனப்படும் நுண்ணியிரிகளிடத்தில் இருந்துமுழு சுத்தமாகஇருக்கிறதா? ஆம்... இல்லை என்றுஇருபதில்கள் தரலாம். எதிர்திசை சவ்வூடுபரவல், கார்பன்வடிகட்டிகள், புறஊதாக்கதிர்கள் பாய்ச்சுதல்,ஓசோன் வாயுவில்புகச்செய்வது, மூலம்நாம் அருந்தும்வாட்டர் கேன்நீர் சுத்தம்செய்யப்படுவதால் அதில்பாக்டீரியாக்களோ வைரஸ்களோமற்றும் அவற்றின்முட்டைகளோ நுண்வடிவங்களோ முற்றிலுமாகஅழிக்கப்படுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News