டீ போடும்போது, முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்
தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
டீ போடும்போது, முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள், பின்னர், டீ த்தூள் போட்டு வடிகட்டி சூடான பால் சேர்த்தால். திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு பாத்திரமும் கருக்காது.
.டீ த்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
குக்கரில் பருப்பை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு தேக்கரண்டி நெய்யையும் அதற்குள் சேர்த்துவிடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்
.முட்டைக்கோஸை சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
0
Leave a Reply