25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


டாடா குழுமத்தின் அடுத்த தலைவர்  யார் ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் யார் ?

TATA குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால், 86  வயதில் , மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ,அவரின் டாடாவின் உயிர் பிரிந்தது. டாடா குழும் தலைவராக 21 ஆண்டுகளாக இருந்து வந்த ரத்தன் டாடா, கடந்த 2012-ம் ஆண்டு அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய, தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் .2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடாவுக்குப் பிறகு, டாடா குழுமத்தின் பொறுப்பை சைரஸ் மிஸ்திரி ஏற்றார். இவர் சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்தார். அதன் பிறகு தற்போது டாடா குழுமம் என் சந்திரசேகர் தலைமையில் உள்ளது. அதேசமயம், டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய ரத்தன் டாடா, மாயா, லியா மற்றும் நெவில் ஆகியோருக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர்கள் மூலமாக டாடா குழுமத்தின் வெற்றிகளில் கவனம் செலுத்துகிறார் இதில் மாயா டாடா மிக முக்கியமானவர் இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் பேஸ் பிசினஸ் ஸ்கூலில் தனது கல்வியை முடித்த இவர், அடுத்து டாடா குழுமத்தின் தலைவராகலாம் என சில காலமாகவே பேச்சு இருந்து வருகிறது.

 இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ரத்தன் டாடா தனது எளிமைக்கு மிகவும் பெயர்போனவர். அதேபோல், 34 வயதான மாயா டாடாவும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகியே இருப்பவர் என சொல்லப்படுகிறது.ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடாவின் மகள். இவர் ரத்தன் டாடாவின் மருமகள் முறையில் வருவதாக சொல்லப்படுகிறது. இவரது தாயார் அல்லு மிஸ்திரி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆவார் .அதன்படி, சைரஸ் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் மற்றும் ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட் குரூப் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பம் 18.4% பங்குகளை வைத்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அவருக்கு அதிக பங்கு இருப்பதால் அவர் எதிர்காலத்தில் டாடா குழுமத்தின் பொறுப்பை மாயா டாடா ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.நோயல் டாடாவிற்கு அடுத்து இந்த மூவரில் ஒருவர் டாடா குழுமத்தின் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News