கார சுண்டல் செய்யும் போது....
கொண்டைக்கடலை,பட்டாணி போன்ற மசாலா சுண்டல் (கார சுண்டல்) செய்யும் போது குழந்தைகள் காரமாக இருந்தால் சாப்பிட மாட்டார்கள். அதில்எலுமிச்சை சிறிது பிழிந்து கலந்துவிட்டு கேரட் துருவல்,கருவேப்பிலை,கொத்தமல்லி தழை நைசாக நறுக்கி சேர்த்து கிளறி கொடுக்கலாம். (அ) கார சுண்டலில் சீஸ் துருவி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாழை இலைக்கு நடுவே இருக்கும் தண்டை, சின்னதாக வெட்டி, எண்ணெயில் போட்டு, பின்பு பலகாரங்கள் சுட்டு எடுத்தால், பலகாரங்கள் அதிக எண்ணெய் குடிக்காது.
உளுந்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியே றும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.
பூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டிப் போடலாம்.
தேங்காயை உடைத்ததும், கண் உள்ள பாகத்தை முதலில் உபயோகித்து விட வேண்டும். அந்தப் பகுதிதான் விரைவில் கெட்டுப்போகும்.
0
Leave a Reply