“கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்” என்ற தலைப்பில் நடத்திய, பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர் கல்லூரியில், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சிவகாசி தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி இணைந்து “கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்” என்ற தலைப்பில் நடத்திய, பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம்- 2024 நிகழ்ச்சியினை, இணை இயக்குநர் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை) முனைவர் சங்கரசரவணன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இந்த கருத்தரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.பின்னர், இந்த பன்னாட்டு அளவிலான கருத்தரங்கில் “கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்” என்ற தலைப்பில் நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I A S., அவர்கள் வெளியிட்டார்.
வாசிக்கத்தக்க கூடிய அளவிற்கு மிகுந்த காத்திரமாகவும், வாசிப்பு சுவையோடும் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இளைஞர்களுக்கான பதிவுகள் எங்கிருக்கின்றது. அதில் கவிப்பேரரசு அவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்பதை எடுத்துக் கூறும் வகையில் தான் இந்த கருத்தரங்கின் பொருண்மை அமைகிறது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எல்லா பொருள்களிலும், வடிவங்களிலும் பாடி இருக்கின்றார். சிறுகதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் மிகச் சிறப்பாக எழுதி இருக்கின்றார்.ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கு பல கட்டுரைகளை ஆராய்ந்து, அதை புரிந்து கொள்வதற்கான அறிவுத்திறமை வேண்டும். அதற்கு பிறகு தான் அதை படிக்க முடியும். அதை படித்து, நாம் புரிந்து கொண்டு அதை ஒரு ஆய்வு கட்டுரையாக, கருத்தாக சொல்வது என்பது சற்று மிக சிரமமானது.
அவருடைய மிகச்சிறந்த ஆய்வு கட்டுரைகளில் அவர் தமிழை, தமிழ் இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக வாசித்து, அவற்றில் தேர்ந்த கருத்துக்களை சமூகவியல் பார்வையோடு வெளிவந்த ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல் உள்ளது. ஒவ்வொரு மனிதர்களும், ஒவ்வொரு காலகட்டத்தில் எதிர்கொள்ளக் கூடிய சிக்கல்களுக்கு, அவருடைய கவிதைகளின் வழியாகவும், ஆய்வு கட்டுரைகள் வழியாகவும் ஒரு தலைமுறையை கடந்து இந்த தலைமுறையில் உள்ள இளைஞர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தெளிவாக வழிகாட்டுகின்றது.இளைஞர்களுக்கான வழிகாட்டுதலில் தேர்ந்த, தெளிந்த வார்த்தைகளை தான் அவர் பயன்படுத்துகிறார். மிக எளிய வார்த்தைகளில் ஒரு காத்திரமான கவிதையை சொல்லுகின்றார்.அவருடைய பெரும்பாலான படைப்புகளிலும் இளைஞர்கள் குறித்து தான் கவலைப்படுகின்றார். ஏனென்றால் அவர்கள் கல்லூரி முடித்து ஒரு 50 ஆண்டுகள் இந்த பூமியில் தனக்காகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் வாழ வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் எது குறித்து எல்லாம் கவலைப்பட வேண்டும் என்று கவிப்பேரரசு அவர்கள் கூறுகின்றார்.
ஓர் தமிழ் இலக்கியம் அறிந்தவர், அறிவியல் மிகுந்த அறிவியல் செய்திகளை தன்னுடைய எல்லா படைப்புகளிலும் கொண்டு வந்தவர். தனிமனித முன்னேற்றம் குறித்து அவர் பாடியிருக்கிறார். அதுவும் குறிப்பாக புதிதாக ஒரு முயற்சி செய்கின்ற போது, அந்த முயற்சியினால் வரக்கூடிய எதிர் விமர்சனத்தை தாண்டி, அதில்வெற்றிபெறுவதுஎப்படிஎன்பதுகுறித்துகூறுகிறார்.இளையோருக்கான பதிவுகள் அவருடைய எல்லா நூலிலும் இருக்கின்றது. எல்லா திரைப்படப் பாடல்களிலும் இருக்கின்றது. திரைப்பட பாடல்களில் அவருடைய தன்னம்பிக்கை பாடல்களை கேட்டால் நிச்சயமாக நமக்கு இருக்கக்கூடிய மன கவலைகளுக்கான தெளிவுகள் பிறக்கக்கூடிய அளவிற்கு இருக்கும். நீங்கள் கவிஞரின் நூல்களை படிக்க வேண்டும். அவருடைய தரமான பாடல்களில் நமக்கு, நம்முடைய வாழ்க்கைக்கு, நமது மன அமைதிக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.
அவருடைய சிறப்பான தனிமனித முன்னேற்ற பாடல்களும், கவிதைகளும் இளைஞர்களுக்கு என்றென்றும் வழிகாட்டக் கூடியவை. திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் பாடல்களைப் போன்று தமிழ் சமூகத்தை எந்நாளும் வழிநடத்தக்கூடிய வரிகளுக்கு சொந்தக்காரரான கவிப்பேரரசு அவர்களின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகளை இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக தான் இதுபோன்ற கருத்தரங்கு என தெரிவித்தார்.
0
Leave a Reply