25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


“வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை” என்ற தலைப்பின் கீழ்  நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(12.04.2024) மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, “வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல், இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும்  தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சார்ந்த உரிமையாளர்கள், பயிற்சி அளிப்பவர்கள், புதிய வாகன விற்பனை முகவர்கள்,  பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் “வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சார்ந்த உரிமையாளர்கள், பயிற்சி அளிப்பவர்கள், புதிய வாகன விற்பனை முகவர்கள்,  பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மீனாம்பிகை பங்களா, பழைய பேருந்து நிலையம் வரை சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று,  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அனைவரும் தவறாமல் நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News