25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


உலகின் முதல் விவசாயி என அழைக்கப்படும் இலை வெட்டி எறும்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகின் முதல் விவசாயி என அழைக்கப்படும் இலை வெட்டி எறும்பு .

எறும்பில் இலை வெட்டி என்ற இனம் ஒன்று உள்ளது. இது உலகின் முதல் விவசாயி எனஅழைக்கப்படுகிறது. வடதென் அமெரிக்க கண்டப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகிறது. குழுவாக வாழும் இதில், ராணி, ஆண்மற்றும் வேலைக்கார எறும்புகள் இருக்கின்றன.

முட்டையிட்டு சந்ததியை பெருக்குவது ராணி எறும்பின் முதன்மை வேலை. நாள் ஒன்றுக்கு, ஆயிரம் முட்டைகள் வரைஇடும். இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது ஆண் எறும்பின் பணி, வேலைக்கார எறும்பு பெரிய உருவம் மற்றும் வலிய தாடையுடன் இருக்கும். இது வீரர் என அழைக்கப்படுகிறது. இதன்பணி. இலைகளை வெட்டி எடுத்து வந்து, புற்றில் சேர்ப்பது. தன்னை விட, 50 மடங்கு எடைஉடைய இலையையும் சுமந்தபடி புற்றை நோக்கி வேகமாக திரும்பும். இலையை தாடையால் வெட்டி, நசுக்கி, உமிழ்நீரை பாய்ச்சும். இலைக்கூழாகி நொதிக்க ஆரம்பித்த சில நாட்களில் பூஞ்சை உருவாகும். அது எறும்புகளுக்கு உணவாக பயன்படுகிறது.

வேலைக்கார எறும்புகள், ராணியை கவனிப்பது, புழுக்களுக்கு உணவளிப்பது, கூட்டை சுத்தம் செய்வது, உணவு சேமிப்பது, எதிரிகளிடம் இருந்து புற்றைப் பாதுகாப்பது, புற்று கட்டுவது என பணிகள் செய்கின்றன. சூழலை காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகூட்டு முயற்சி, வேலைப் பகிர்வு, சுறுசுறுப்பு, விடாமுயற்சியை கடைபிடித்து உதாரணத்துவமாக வாழ்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News