அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா.
பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுபண்டு இராஜபாளையம்,அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா ,நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு பராபவ வருஷம் சித்திரை மாதம் 15-ம் தேதி (28.04.2026) செவ்வாய்க்கிழமை இரவு 6-00 மணி அளவில் மின் விளக்குகளால்அலங்கரிக்கப்பட்ட தட்டுச்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியாகி, அருள் ஜோதிவடிவமாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள், கிளாரினெட் கச்சேரி, வான வேடிக்கைகளுடன் புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி முக்கியவீதிவழியாக அருள் ஜோதி சொரூபசக்தியாய் மக்களுக்கு காட்சி கொடுத்து நகர்வலம்வந்து பழையபாளையம் (முனிசிபல் குடிநீர் தண்ணீர் தொட்டி) வடபக்கம்அமைந்துள்ள பழையபாளையம் ராஜூக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன்கோவிலுக்கு வழக்கம் போல் வந்தடையும். அவ்வமயம் பக்தகோடிகள் அனைவரும் தவறாதுபொங்கல் விழா வைபவங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள்பெற வேண்டுகிறோம்.
அன்று இரவு 7 மணி முதல் இரவு 12 மணி வரை மம்சாபுரம் S. தனலட்சுமி வில்லிசை குழுவினரின் ''வில்லிசைக் கச்சேரி" அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் மைதானத்தில் வைத்து நடைபெறும்.
இப்படிக்கு,
தலைவர்.பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொது பண்டு
அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழாக் கமிட்டியார்.
0
Leave a Reply