25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


.பெண் கடன் வாங்குபவர்கள் 10% அதிகமாக இருப்பதாக, ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பெண் கடன் வாங்குபவர்கள் 10% அதிகமாக இருப்பதாக, ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது

சமீபத்தில் நடந்த சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஃபின்டெக் பிளாட்ஃபார்ம்Fibe, பெண் கடன் வாங்குபவர்களை குறித்து சில ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.EMIக்களை சரியான நேரத்தில் செலுத்துவதில் ஆண் கடன் வாங்குபவர்களை காட்டிலும் பெண் கடன் வாங்குபவர்கள்10% அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.இதன் காரணமாக கடன் விஷயத்தில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பொறுப்புடன் நடந்து கொள்வது தெரிய வந்திருக்கிறது.புதிதாக கடன் வாங்கும் பெண்களின்(NewtoCreditNTC) எண்ணிக்கை கடந்த5 வருடங்களில் இரட்டிப்பாக இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில் 18 சதவீதம் இருந்த இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 40சதவீதமாக அதிகரித்திருப்பது இந்த கருத்துக்கணிப்பு மூலமாக தெரிய வந்துள்ளது.

மறுபுறம் புதிதாக கடன் வாங்கும் ஆண்களின் எண்ணிக்கை 22% குறைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டில்82 சதவீதம் இருந்த இந்த எண்ணிக்கை2023 ஆம் ஆண்டில்60 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து பெண் கடன் வாங்குபவர்களை கருத்தில் கொள்ளும் பொழுது,NTC கஸ்டமர்கள்32 சதவீதம் என்ற மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர்.கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடிய மற்றும் வழக்கமான முறையில் லோன்களை வாங்கக்கூடிய பெண்கள்13% ஆகவும், அதுவே கிரெடிட் கார்டு இல்லாமல் ஆனால் லோன் பெறக்கூடிய பெண்கள்18 சதவீத எண்ணிக்கையையும் வகிக்கின்றனர். பெண் கடன் வாங்குபவர்களின் இந்தவளர்ச்சி போக்கு தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு விதமான முயற்சிகளில் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. கடன் விஷயத்தில் பெண்களின் பொறுப்புணர்வை பறைசாற்றும் அதே வேளையில் முதல் முறையாக கடன் வாங்கக்கூடியNTC கஸ்டமர்களின் வயது கடந்த5 வருடங்களில் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. முதல்முறையாக கடன் வாங்கக்கூடிய கஸ்டமர்களின் வயது 2019 ஆம் ஆண்டில் 26 ஆக இருந்தது. இதுவே தற்போது 2023 ஆம் ஆண்டில் இது31 வயதாக அதிகரித்துள்ளது.கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனும், புதிய பொருளாதார சுதந்திரம் மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான துணிச்சலைக் காட்டுகிறது." 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News