25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 04, 2024

"Coffee With Collector” என்ற 106-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (03.10.2024) சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயிலும் 60 கல்லூரி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 106- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.இந்த 106-வது காபி வித் கலெக்டர் நிகழ்வில் கலந்து கொண்ட அய்ய நாடார் ஜானகி அம்மாள் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் பயிலும் பார்வை திறன் குறைந்த மாணவி செல்வி சூர்யா அவர்கள், தனக்கு பாடங்களை எளிதாக படிப்பதற்கு உரிய கேட்கும் கருவி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததன்பேரில், அம்மாணவிக்கு உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் "Daisy player" என்னும் ஒலிப்பதிவு கருவியை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 106-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Oct 04, 2024

முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு கலந்து கொள்ள சென்னை செல்லும் பள்ளி மாணவர்கள் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (03.10.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை- 2024 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு கலந்து கொள்ள சென்னை செல்லும் பள்ளி மாணவர்கள் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S,அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.ஜாகிர் உசேன் உள்ளனர்.

Oct 04, 2024

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர்களுக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அவர்களின் கடிதம்  ந.க.எண். 32398/2022/எப்2, நாள்.13.02.2023-ன்படி,  விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்ஃகுடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர்களுக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 22.10.2024 அன்று காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை 01.10.2024 முதல் 10.10.2024 தேதிக்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் (வளர்ச்சிப்பிரிவு) அவர்களுக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். தற்போது ஓயு;வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களுடன் இணைக்கப்பட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 04, 2024

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

சுற்றுச்சூழல்  மற்றும் வனத்துறையின் 25.06.2018 நாளிட்ட அரசாணை எண்.84-ன் மூலம் கடந்த 01.01.2019 முதல் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, சேமித்தல் மற்றும் விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும்,  மத்திய  மாசு கட்டுப்பாடு வாரியம் 04.02.2024 நாளிட்ட அறிவிக்கை மூலம் ஒருமுறையே பயன்படுத்தும் ஒரு சிலவகையான நெகிழிப் பொருட்களைத் தடை செய்துள்ளது.ஒருமுறையே  பயன்படுத்தி தூக்கி  எறியப்படும் நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவைகளுக்கு மூடுதல் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டு, அவைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒருமுறையே பயன்படுத்தி  தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களை விற்பனை மற்றும் சேமித்து வைக்கும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு, அந்நெகிழிப்பொருட்கள் உள்ளாட்சி அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இருந்த போதிலும், சமீப காலமாக விருதுநகர் மாவட்டத்தில் நெகிழிப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக தொடர்ச்சியாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும்  நெகிழிப் பொருட்களை விற்பனை செய்வோர்  மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேலும், பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு,  ஒருமுறையே பயன்படுத்தி  தூக்கி எறியப்படும் நெகிழிப்  பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Oct 04, 2024

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நிர்வாகப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் (03.10.2024) நகராட்சி நிர்வாகப் பணிகளின் முன்னேற்றம், நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதனுடைய தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் , I A S ,. அவர்கள் ஆய்வு செய்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

Oct 04, 2024

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி ஆகிய 4 வட்டாரங்களைச் சார்ந்த 184 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விருதுநகர் மற்றும் காரியாபட்டி வட்டாரங்களை ஒன்றிணைத்து விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் முதன்மைச் செயல் அலுவலர்-1 மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர்-1 பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது. முதன்மைச் செயல் அலுவலர் அவர்களின் தகுதிகளாக B.ScAgri, / D.Agri / MBA  முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 40 வரை ஊதியம் ரூ.15000/- மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர் அவர்களின் தகுதிகளாக ஏதேனும் ஒரு பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 45 வரை ஊதியம் ரூ.10000/- மேற்குறிப்பிட்ட பணிகளில் அனுபவமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேற்படி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய சுய விபரபடிவம் (Resume) மின்னஞ்சல் மூலமாக, தபாலிலோஅல்லது நேரிலோ vnr.tnrtp@yahoo.com வருகிற 09.10.2024-ம் தேதி மாலை 5 மணிக்குள்; அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.   

Oct 04, 2024

மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை  சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.    முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- என நான்காயிரம் ரூபாய்  உதவித்தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.               தமிழாய்ந்த தமிழ்மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1334 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்  பயனடைந்துள்ளனர்.             அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்  பெருமக்களிடமிருந்து 2024-2025ஆம்  ஆண்டிற்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.‘மகளிர் உரிமைத் தொகை, சமூகநலப் பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது‘.விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1) 01.01.2024 ஆம் நாளன்று    58   வயது  நிறைவடைந்திருக்க வேண்டும். 2) ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்), 3)தமிழ்ப்பணிஆற்றியமைக்கானவிவரக்குறிப்பு.  4) தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.  5) ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.  அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/- மருத்துவப்படி ரூ.500/- அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.  நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024 - க்குள் அளிக்க வேண்டுமெனவும் நேரடியாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது  எனவும்  மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 03, 2024

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை வட்டம், கல்லூரணி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை  வட்டம், கல்லூரணி  கிராமத்தில்,  (02.10.2024) மாகத்மாகாந்தி அடிகளின் 156 -வது பிறந்த நாளை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கிராமசபை கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2024 முதல் 30.09.2024 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.(2023-2024),தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம்  குறித்து விவாதித்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்கள்.என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான்  இதன் நோக்கம்.கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நினைவு கொள்வதற்காகவும் கிராமங்கள் இன்று தனக்கு தேவையான வளர்ச்சியில் தன்னிறைவு அடைந்து விட்டதா என்பதை உறுதி செய்யவும் மகாத்மா காந்தியடிகள் உடைய காலத்திற்கும் பொருந்தக்கூடிய கொள்கைகள் எல்லாம் நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்கும் இன்றைய நாள் இருக்கிறது.நமது கிராமத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், அனைத்து கிராமத்திலும் அனைத்து நகரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் உருவாக்கக்கூடிய குப்பைகள் நமது வீட்டில் இருந்து நம்ம செயல்பாடுகள் காரணமாக கடைகளில் இருந்து உருவாக்கக்கூடிய குப்பைகள் முறையாக நாம் அப்புறப்படுத்தி பராமரிக்கப்பட வேண்டும்.குப்பைகள் பொது இடங்களில்  தேங்கி கிடந்தால் நோய் பரவும்  அபாயம் ஏற்படும்.குப்பைகள் மண்ணின் தன்மையை பாதிக்கும்.  அதனால், தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, குப்பைகளை முறையாக மற்றும் குப்பை மக்காத குப்பைகள் என்று பிரித்து சரியாக கொடுக்க வேண்டும். கிராமங்களின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட்டால், ஒரு கிராமம் முன்னேறும், ஒரு நகரம் முன்னேறும், ஒரு நாடு முன்னேறும். இந்த நிகழ்ச்சியின் நோக்கமும் இது  தான்.மேலும், இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளை கூறி விவாதித்து முடிவுகளை எடுப்பதற்கும் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. எனவே இந்த கிராம சபையில் எடுக்கக்கூடிய தீர்மானங்கள், விவாதிக்கக் கூடிய விவாத பொருட்களை, பொதுமக்கள் பங்களிப்போடு விவாதம் செய்து, அதில் முடிவுகள் எடுக்கவும், புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை கருத்துக்களை தெரிவிக்கவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மூத்தக் குடிமக்கள், சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும்  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடப்பட்டது.            இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமூக முதலீட்டு நிதி தலா ரூ.50,000/- வீதம்  இரண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும், உற்பத்தியாளர் குழு ஒன்றிற்கு ரூ.30,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்  அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கல்லூரணி கிராம பொதுமக்கள் மற்றும் அரசு  அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 03, 2024

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 156 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் (02.10.2024)  அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 156 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.        விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் 156-வது பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு  மரியாதை செலுத்தினார்கள்.அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் கிராமிய நூற்பு நிலையங்கள் ரெங்கப்பநாயக்கன்பட்டியில் 25 இராட்டைகளும், மங்காபுரத்தில் 8 ராட்டைகளும், வன்னியம்பட்டியில் 12 இராட்டைகளும் ஆக மூன்று கிராமிய நூற்பு நிலையங்களிலும் 45 இராட்டைகள் செயல்பட்டு வருகிறது.மேலும் வத்ராயிருப்பு கதர் உபகிளை ( இருப்பு மங்காபுரம் ) மூலமாக 11 கைத்தறிகளும் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கதர் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் அண்ணல் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு கதர் ரகங்கள் குறியீடு ரூ.90.00 இலட்சத்தில் கதர் ரகங்கள் ரூ.46.06 இலட்சமும் மற்றும் கிராமப் பொருட்கள் குறியீடு ரூ.61.50 இலட்சத்தில் ரூ.24.84 இலட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.மேலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகையாக 94 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக தலா ரூ.5000/- வீதம் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், அண்ணல் காந்தியடிகளின் 156-வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் 02.10.2024 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும்.மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினாலான பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன் குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர், பாலிவஸ்தரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்திற்கு கதர் விற்பனைக் குறியீடாக ரூ.137.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் நுாற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், விருதுநகர் இரயில் நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் திருமதி சரளாதேவி, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், மாவட்ட குடிசை தொழில் மேலாளர் திரு.இராமகிருஷ்ணன், விருதுநகர் வட்டாட்சியர்,  கதர் வாரிய பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 03, 2024

மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வுக்கான உண்டு உறைவிட, சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.பொறியியல் கல்லூரியில்,  மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான  தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வுக்கான உண்டு உறைவிட, சிறப்பு பயிற்சி முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  (01.10.2024)  நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களிடையே போட்டித்தேர்வின் முக்கியத்துவம், பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து உரையாற்றினார்.பள்ளி மாணவ மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு" நடத்தப்பட்டு வருகிறது.2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500ஃ- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழில் ஆர்வம் மிக்க 140 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்விற்கு தயார் செய்யும் வகையில், கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.பொறியியல் கல்லூரியில்,  உண்டு, உறைவிட பயிற்சி முகாம் 30.09.2024 முதல் 17.10.2024 வரை நடைபெறுகிறது.அதன்படி,  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உண்டு, உறைவிட பயிற்சி முகாமினை பார்வையிட்டு, மாணவர்களிடையே போட்டித் தேர்வின் முக்கியத்துவம், பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தினார்.மேலும், போட்டி தேர்வில் பங்கு பெறுவது என்பது இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் திறனை அறிந்து கொள்ளவும், அனைத்து போட்டி தேர்வுகளில் பயமின்றி பங்கு பெற்று வெற்றி பெறவும் முடியும். வெற்றி பெறுவதில் மூலம் கிடைக்கும் உதவி தொகை கல்வி செலவிற்கும் உதவுவதோடு குடும்பத்தின் நிதிசுமையை குறைக்கும். இதுபோன்று தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 68 69

AD's



More News