25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 08, 2024

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்-

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.  இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகையாக முதல் பரிசு ரூ.1,00,000/-  ( ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) இரண்டாம் பரிசு ரூ.60,000/-  (ரூபாய் அறுபதாயிரம் மட்டும்) மற்றும் மூன்றாம் பரிசு ரூ.40,000/- (ரூபாய் நாற்பதாயிரம் மட்டும்) வழங்கப்படுகிறது.  இதற்கான விண்ணப்பப்படிவம் தோட்டக்கலைத்துறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.in -இல் பதிவேற்றம் செய்து, உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 08, 2024

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில்; 11, 860 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது.மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 8-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:விருதுநகர் யூனியனில், 8ம் தேதி காசி ரெட்டியாபட்டி, 9ம் தேதி வி.முத்துலிங்கபுரம்,10ம் தேதி செங்குன்றாபுரம், 13ம் தேதி கே.புதூரிலும்,அருப்புக்கோட்டை யூனியனில், 8ம் தேதி புலியூரான், 9ம் தேதி கோவிலாங்குளம், 10ம் தேதி ஆதிபட்டி, 13ம் தேதி செட்டிகுறிச்சியிலும்,சிவகாசி யூனியனில், 8ம் தேதி ஈஞ்சார், 9ம் தேதி ஈஞ்சார்,10ம் தேதி நடையனேரி, 13ம் தேதி மேலஆமத்தூரிலும்,காரியாபட்டி யூனியனில், 8ம் தேதி மந்திரி ஓடை, 9ம் தேதி புளியம்பட்டி, 10ம் தேதி முடுக்கன்குளம், 13ம் தேதி எஸ்.கல்லுப்பட்டியிலும்,நரிக்குடி யூனியனில், 8ம் தேதி செம்பொன்னாங்குறிச்சி, 9ம் தேதி இருஞ்சிறை, 10ம் தேதி இலுப்பையூர், 13ம் தேதி நல்லுக்குறிச்சியிலும்,  ராஜபாளையம் யூனியனில், 8ம் தேதி சொக்கநாதன்புதூர், 9ம் தேதி சொக்கநாதன்புதூர், தெற்கு தேவதானம், 10ம் தேதி சுந்தர நாச்சியார்புரம், 13ம் தேதி சம்சிகாபுரத்திலும்,சாத்தூர் யூனியனில், 8ம் தேதி கத்தாளம்பட்டியிலும், 9ம் தேதி மணீப்பாறை பட்டி, 10ம் தேதி மேலமடை, 13ம் தேதி D.மேட்டுப்பட்டியிலும்,திருவில்லிபுத்தூர் யூனியனில், 8ம் தேதி இடையன்குளத்திலும், 9ம் தேதி முள்ளிக்குளத்திலும், 10ம் தேதி அயன்நாச்சியார் கோவில், 13ம் தேதி பிள்ளையார்நத்ததிலும்,திருச்சுழி யூனியனில், 8ம் தேதி தமிழ்பாடியிலும், 9ம் தேதி குலேசேகர நல்லூரிலும்,10ம் தேதி வேலாயுதபுரத்திலும், 13ம் தேதி தும்முசின்னம்பட்டியிலும்,வெம்பக்கோட்டை யூனியனில், 8ம் தேதி செவல்பட்டியிலும், 9ம் தேதி விஜயரங்காபுரம்,10ம் தேதி ஆலங்குளத்திலும்,13ம் தேதி அப்பையநாயக்கன்பட்டியிலும்,வத்றாப் யூனியனில், 8ம் தேதி மகாராஜபுரத்திலும், 9ம் தேதி மகாராஜபுரத்திலும், 10ம் தேதி ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும், 13ம் தேதி ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும் முகாம்கள் நடைபெறுகிறது                  மேலும் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 8ம் தேதி முறையே S .V  .அண்ணாமலையம்மாள் மகப்பேறு இல்லம்   9, 10-ம் தேதி சிவன் கோவில் அங்காடி, 13-ம் தேதி பாத்திமா நகர் சத்துணவு மையம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.எனவே பொது மக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகாமில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுலவர் விவரம்:மாவட்ட திட்ட அலுவலர்,முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்,விருதுநகர்.கைப்பேசி எண். 73730 04974 - என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 08, 2024

வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி

வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(07.10.2024) வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்களில் சாகுபடியினை அதிகரித்தல்,  சிறுதானிய உணவு உட்கொள்வதனை அதிகரித்தல், சிறுதானிய பயிர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் உள்ளிடவைகள் குறித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த வாகனங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, சிறுதானியங்களில் சாகுபடியினை அதிகரித்தல் குறித்தும், சிறுதானிய உணவு உட்கொள்வதனை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், சிறுதானிய பயிர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் உள்ளிடவைகள் குறித்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) திருமதி சுமதி மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 08, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில்  (07.10.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பார்வைத்திறன் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்க ஏதுவாக தலா ரூ.9954/- வீதம் மொத்தம் ரூ.99,540/- மதிப்பிலான டெய்சி பிளேயர் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள், I A S, அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 07, 2024

அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், “பழவம் குறுங்காடு” எனும் சுமார் 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வேண்டுராயபுத்தில், (05.10.2024) சிவகாசி பசுமை மன்றம் சார்பில், அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், “பழவம் குறுங்காடு” எனும் சுமார் 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா,I AS., அவர்கள் மற்றும் துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.,இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மரக்கன்றுகள் நட்டு  துவக்கி வைத்தார்.இந்த பழவம் குறுங்கட்டில், 210 விதமான 40,000 பூர்வீக மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதில், 6800 அடி பாசன குழாய்கள் அமைக்கப்பட்டு, 9000 மீட்டர் சொட்டுநீர் பாசனமும், 3510 அடி வேலி அமைத்தும் பராமரிக்கப்படுகிறது.மதுரையில் நேற்று வீசிய காற்றினால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான மரங்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மரக்கிளைகளை அது முறித்து இருக்கிறது. அக்டோபர் மாதம் இதற்கு முன்பான வானிலை குறிப்புகளை பார்த்தால் 150 ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் எவ்வளவு வேகமாக காற்று வீசியதற்கான வரலாறு இல்லை. இதெல்லாம்  பருவநிலை  மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியாக நகர்ப்புறமாக வளர்ச்சி அடையக்கூடிய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகரப்புறங்களில் தான் வசிக்கிறார்கள்.  2030ல் இது  70 சதவிகிதமாக மாறி விடும் என்கிறார்கள்.  வரும் 2040-ல் ஏறத்தாழ 90 சதவீதமான மக்கள் நகர்ப்புற பகுதிகளில் தான் வசிப்பார்கள். அதனால் நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக்கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சினைகள் அதிகமாகும்.   நகரமயமாகும் போது அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது உடனடியாக இது  சுற்றுச்சூழலை பாதித்து பருவநிலை மாற்றத்தை உண்டாக்கும். எனவே நாம் வாழக்கூடிய பூமியில் இந்த பூமியை வாழ்வதற்கு ஏற்ப மாற்ற வேண்டுமானால், உரிய பசுமை பரப்பை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும். இது விருதுநகர் மாவட்டத்தில் 10 விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கிறது.மரக்கன்றுகளை நடுதலை தினந்தோறும்  மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்கள் எந்த துறையில் பணிபுரிபவராக இருந்தாலும், அதை ஒட்டி நம்மால் முயன்ற அளவிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மரம் நடுதலை அதிகப்படியான எண்ணிக்கையில் மேற்கொள்ள வேண்டும். மரம் நடுவதோடு மட்டுமல்லாமல் அதை ஓராண்டுக்காவது பராமரிக்க வேண்டும்.ஒவ்வொரு நிறுவனங்களும் இது போன்ற இடங்களில் பசுமை பரப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் மட்டும் 1100 தொழிற்சாலைகள் இருக்கின்றன. பெரிய அளவிலான அச்சு தொழிற்சாலைகள் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகள் எல்லாம் இணைந்து மரக்கன்றுகளை நட வேண்டும். அரசினுடைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் காலியாக இருக்கிறது என்ற பட்டியலை எடுத்து வைத்திருக்கின்றோம். எனவே இது போன்ற நிறுவனங்கள் முன்வந்து ஓர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி மரங்களை நடுவதற்கு நமது மாவட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.ஒரு கோடி மரங்கள் நடுவதற்கான இடங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் எங்கு இருக்கின்ற தொடர்பான ஒரு பட்டியலை கூட விரைவில்  வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து 450 ஊராட்சிகளிலும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு பணியாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்து அனைத்து ஊர்களிலும் நர்சரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சி என்பது ஒரு அடையாளமான நிகழ்ச்சி. இதுபோன்று நிறைய நிறுவனங்கள் பெருமளவு மரக்கன்றுகள் நடுவற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், வனத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலை அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Oct 07, 2024

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்,  (05.10.2024) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்   திரு.ப.மாணிக்கம் தாகூர்;  அவர்கள் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தன்னார்வ பயிற்சி மையத்தில் பயின்று, அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியினை  பெற்ற 12 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்  அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அந்த வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது, படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது போன்றவற்றை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது.இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய இரண்டு தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன.மேலும், பெண்கள் அதிகமாக பணிக்கு செல்கின்ற மாநிலமாக தமிழ்நாடு தான் திகழ்கிறது. ஒரு காலத்தில் அடுப்படியில் இருந்த பெண்கள் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் சென்று சாதித்து வருகின்றனர்.நீங்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு திரும்பும் போது, அனைவரும் தங்களது திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்.  இந்த வயதில் கற்றல் என்பது மிக மிக முக்கியமானதாகும்.  உங்களது ஆர்வத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.மேலும், இளைஞர்கள் கல்வி கற்றலை கைவிடாது தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை வேலைவாய்ப்பின்மை ஆகும். அதே நேரத்தில் உலகத்தினுடைய மிக முக்கியமான வேலை வாய்ப்புகளை ஆய்வு செய்யும் அமைப்பான  இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனேஷன் என்ற அமைப்பு பல மில்லியன் கணக்கான வேலைகளுக்கு ஆட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறது. வேலை வாய்ப்பு என்பது எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதற்கு இணையான பிரச்சனையாக வேலைக்கான தகுதியின்மை இல்லை எனப்படுகிறது.இந்தியாவில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 33 விழுக்காடு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 60 விழுக்காடு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு 97 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்விக்கு சென்று இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக உள்ளது.மேலும், தாங்கள் பெற்ற அறிவு, கற்ற அறிவு ஆகியவற்றை வைத்து தங்கள் திறன்களை வளர்த்து கொள்வது மிக மிக முக்கியம் ஆகும்.  தற்பொழுது உள்ள காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் நமது திறன்களை வளர்ப்பது என்பது மிக எளிதான ஒன்றாக உள்ளது.மேலும், தாங்கள் அனைவரும் தொழில் தொடங்குவதற்கு, பல்வேறு திட்டங்கள் உள்ளன. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் என்னென்ன திட்டங்கள் உள்ளன, என்னென்ன கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன மற்றும் குறைந்த வட்டி வீதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும், அரசானது பல்வேறு  பயிற்சி வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அது குறித்து அனைவரும் இணையத்திலும், நாளிதழ்களிலும் நன்கு கவனித்து  பயன்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும்,  இன்றைக்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் வேலைக்கு தகுதியான நபர்கள் இல்லை என்பது தான். எனவே, ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவை திறன்களாக மாற்றி கொள்ள வேண்டும்.நீங்கள் அனைவரும் அறிவை திறன்களாக மாற்ற  வேண்டும். உலகளவில் உள்ள வாய்ப்புகள், இந்திய அளவில் உள்ள வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், கடன் வாய்ப்புகள் என  எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, தங்களுடைய திறன்களை வளர்த்து முன்னேற வேண்டும்.இந்தியாவில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் கீழ், பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக உருவாக்கி தருகின்றது.  அதே போன்று, தமிழக அரசும் 20,000 முதல் 30,000 வரை  வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மேலும், தனியார் வேலைவாய்ப்பு என்பது எதிர்காலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்பையும், அதிகப்படியான சம்பளத்தையும் வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு, தனியார் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் வேலை வாய்ப்பு என அனைத்தும் அதிமாக இருக்கிறது. இதில் எல்லாவற்றிலும் நமது மாணவர்கள் சோம்பலை விடுவித்து, திறன்களை வளர்த்து கொண்டால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும்,  சுமார் 1000-த்திற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்து கலந்து கொண்டனர்.

Oct 05, 2024

இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில்  (04.10.2024) நகராட்சி நிர்வாகப் பணிகளின் முன்னேற்றம், நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அதனுடைய தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் ஆய்வு செய்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Oct 05, 2024

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஏழாம் நாள் நிகழ்ச்சிகள்

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஏழாம்  நாளான 03.10.2024  அன்று இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) திரு.பா.செந்தில்குமார் அவர்கள் தலைமையில்,தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் “புத்தகம் - காகிதமல்ல கனவுகள்” என்ற தலைப்பிலும்,எழுத்தாளர் சு.இலட்சுமணப் பெருமாள் அவர்கள்“புத்தகங்கள் - அட்சயப் பாத்திரங்கள்” என்ற தலைப்பிலும் எழுத்தாளர் புலவர் மா.இராமலிங்கம் அவர்கள் “மரம் நமக்கு வரம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா அவர்கள் வரவேற்புரையும், மாவட்டப் பதிவாளர்(பதிவுத்துறை) திருமதி சி.சசிகலா  அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Oct 04, 2024

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை முழுமையாக அடைவதற்கான முழு நிறைவுத் திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் தங்கச்சி அம்மன் திருமண மண்டபத்தில், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை முழுமையாக அடைவதற்கான முழு நிறைவுத் திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் (03.10.2024) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ.3 இலட்சம் கடனுதவிகளையும், மருத்துவத்துறை சார்பில் 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வேளாண்மைத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்திய அரசினுடைய நிதி ஆயோக் அமைப்பின் மூலம் முன்னேற விழையும் மாவட்டம் மற்றும் முன்னேற விழையும் வட்டாரம் திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னேற விழையும் மாவட்டம் மற்றும் முழு நிறைவுத் திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர்களுக்கான ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதற்கு முயற்சி எடுத்து பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்களை தவிர்த்து நல்லமுறையில் குழந்தைப்பேறு அடைந்து தாயும் சேயும் நலமாக இருக்க சீரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.விவசாயிகளுக்கு அவர்களுடைய வாழ்வாதாரம், விவசாயிகள் அதிகமாக உற்பத்தியைப் பெருக்குதல், புதிய பயிர்களை விளைவிப்பதன் மூலமாக விவசாயிகளுடைய வருமானத்தை பெருக்குவது, பெண்கள் சிறு தொழில்களை செய்வதன் மூலமாக, குறிப்பாக கடன் உதவிகளை பெற்று அவர்கள் பகுதியிலேயே சிறிய தொழில்களை தொடங்குவதன் மூலமாக பொருளாதார வாய்ப்புகளை பெறுதல் இதன் நோக்கமாகும்.இது தொடர்பாக முழு நிறைவுத் திட்டத்தின் கீழ் விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு  ஆகிய துறைகள் தொடர்புடைய குறிப்பிட்ட ஆறு குறியீடுகளுக்கான 100 சதவிகித இலக்கினை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய மாநில திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அனைத்து தரப்பு மக்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மாணவர்கள் என மக்களினுடைய நலனுக்காக திட்டங்களை எல்லாம் முழுமையாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இந்த திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பும் இருக்க வேண்டும். கருவுற்ற மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் மூன்று மாதத்துக்குள் பதிவு செய்யும் பொழுது தான் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு, ஊட்டச்சத்து குறைபாடுகள் என அனைத்தையும் சரி செய்து, பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய முடியும்.பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான ஊட்டச்சத்துக்களை உறுதி செய்ய வேண்டும்.  இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பின், முறையாக கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.18 வயது முன்பாக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி தவறாகும். அப்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், திருமணம் செய்து கொண்ட ஆணின் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே, குழந்தை திருமணத்தை அனைத்து பெற்றோர்களும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய வேண்டும். மண்ணின் தன்மை, சத்துக்களுக்கு ஏற்ப உரம் இட வேண்டும்.  இதனால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. எனவே, விவசாயிகள்  அனைவரும்  வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.நமது பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. அந்த சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அரசு வழங்குகிறது. அந்த நிதியை பெற்று அதன் மூலம்  தொழில் செய்து, தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இது போன்ற ஒவ்வொரு துறைகளுக்கும் இலக்குகள் உள்ளன. இந்த இலக்குகளை அடைந்த மாவட்டம் மற்றும் வட்டாரமாக விருதுநகர் மாவட்டம் உருவாக வேண்டுமென்றால், இது குறித்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தான் இந்த முழு நிறைவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களினுடைய பயன்கள் ஏழை, எளிய பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால், முதலில் அது குறித்த புரிதல், விழிப்புணர்வு மிகவும் அவசியம். இவற்றை முறையாக அரசு அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், விவசாயம், மருத்துவம் மற்றும் சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். 

Oct 04, 2024

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஆறாம் நாள்

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெறும் மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.அதன்படி, ஆறாம் நாளான 02.10.2024 அன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்(திருநெல்வேலி) திருமதி பெ.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில், திரு.கா.சி.தமிழ்க்குமரன் அவர்கள் எழுதிய “மந்தைப் பிஞ்சை” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் திரு.சோ.தர்மன் அவர்கள் “மனிதர்களும் மரங்களும்” என்ற தலைப்பிலும், பேச்சாளர் திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் “தாயினும் சாலப்பரிந்து” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் படைப்புலகில் பெண்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சூ.பாமா, திருமதி ர.ரமாதேவி, திருமதி பிருந்தா ஜ.ராகவன் அவர்கள்  ஆகியோர்கள் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) திருமதி தனலட்சுமி  அவர்கள் வரவேற்புரையும், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ம.ஷீலா சுந்தரி  அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 68 69

AD's



More News