தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நேர்மையான மற்றும் கண்ணியமான தேர்தலை எதிர்கொள்ளவும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் வாக்களர்களிடையே பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யவும், என் வாக்கு விற்பனைக்கு அன்று என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, ரங்கோலி போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் சட்டமன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாக்காளர்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.வாகன விழிப்புணர்வு:அதனடிப்படையில், (10.04.2026) விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு கிராமத்தில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் LED வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத்தேர்தல்-2026 அமைதியாகவும், நேர்மையாகவும், கண்ணியத்துடனும், 100 சதவீதம் வாக்குப்பதிவுடனும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (09.04.2026) விருதுநகர் மாவட்டம், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, வெம்பக்கோட்டை வட்டம், எதிர்க்கோட்டை ஊராட்சியில் உள்ள KRP கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ/மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நேர்மையான வாக்கு - உறுதிமொழி: "இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையுள்ள குடிமகனாகிய நான், நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவேன் என்றும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது வாக்கினை நேர்மையாகப் பதிவு செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்." என்ற உறுதிமொழியினை மாணவ/மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு: மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொடர் விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி பேருந்துகளில் என் வாக்கு, என் குரல் என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுச்சீட்டு (Stickers) பொருத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத்தேர்தல்-2026 அமைதியாகவும், நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவுடனும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு:இதன் ஒரு பகுதியாக, (09.04.2026) விருதுநகர் மாவட்டம், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லி ஊராட்சியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சிறப்பு தேர்தல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.நேர்மையான வாக்கு - உறுதிமொழி:இந்நிகழ்வில், பணத்திற்காகவோ அல்லது பிற தூண்டுதல்களுக்காகவோ வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக என் வாக்கு விற்பனைக்கு அன்று" என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட உறுதிமொழியினை பணியாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஏற்றுக் கொண்டனர்: "இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையுள்ள குடிமகனாகிய நான், நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவேன் என்றும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது வாக்கினை நேர்மையாகப் பதிவு செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்." மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு:மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொடர் விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் விடுமுறையைப் பயன்படுத்தி, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என இவ்விழாவின் வாயிலாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வுஇதன் ஒரு பகுதியாக, இன்று (09.04.2026) 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில், கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்படி, கல்லூரியில் பயிலும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கோலப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:உறுதிமொழி ஏற்பு: "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.போட்டிகள்100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவியர்களிடையே ரங்கோலி போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.கையெழுத்து இயக்கம்தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.
விருதுநகர் மாவட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி (08.04.2026) நடைபெற்றது.கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணியில் ஏராளமான அரசுப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.விழிப்புணர்வு செயல்பாடுகள்:முழக்கங்கள்: "எனது வாக்கு - எனது உரிமை", "விலை மதிப்பற்றது நமது வாக்கு", "நூறு சதவீதம் வாக்களிப்போம் - ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவோம்" போன்ற விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர்..விழிப்புணர்வு பதாகைகள்:வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வண்ணமயமான பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.துண்டுப் பிரசுரங்கள்:பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, தேர்தல் நாளன்று அனைவரும் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முதல் 23.04.2026 (செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வரையிலும் மற்றும் 04.05.2026 (திங்கள் கிழமை ) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் தற்காலிகமாக முடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப. அவர்கள் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளர்.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகக் கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S ,. அவர்கள் தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் (08.04.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.தேர்தல் பணிகளை முறையாகக் கண்காணிக்கவும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் தொலைபேசி வழியாகப் பெறப்படும் புகார்கள் மற்றும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலம் பெறப்படும் தகவல்கள் பதிவு செய்யப்படுவதைப் பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.மேலும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் தேர்தல் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (MCMC) பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் போது பின்வரும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்:தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்:திரு. உதயன் மிஷ்ரா,I A S.(இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்)திரு. அரவிந்த் மீனா, I A S.(சாத்தூர் மற்றும் சிவகாசி)திரு. நவநீத் குமார், I A S.,(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை)திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., (திருச்சுழி)தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்:திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்)திரு. அனில்குமார், இ.வ.ப. (சாத்தூர் மற்றும் சிவகாசி)திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை)திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப.(திருச்சுழி)இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்குப் பார்வையாளர்கள் அறிவுறுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, (07.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி (தனி) செண்பகத் தோப்பு மலைவாழ் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கையெழுத்து இயக்கம்:"எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் அரசு அலுவலர்கள் மற்றும் செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் திரளாகக் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து, ”100 சதவீதம் முழுமையாக வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியர் அவர்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ஆதிந) அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், ஜஸ்டிஸ் பகவத் காலனி செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு இதன் ஒரு பகுதியாக, (07.04.2026) 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்: உறுதிமொழி ஏற்பு: "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வண்ணமயமான ரங்கோலி விழிப்புணர்வு: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவியர் அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு வண்ண மலர்களை பயன்படுத்தி ரங்கோலி மூலம் '100% VOTE' என்ற வடிவத்தை உருவாக்கி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். தோட்டக்கலைத்துறையின் பங்களிப்பு: மாவட்ட தேர்தல் அலுவலரின் நேரடி மேற்பார்வையில், இக்கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை இச்சிறப்பு நிகழ்வினை ஒருங்கிணைத்தது. முக்கியப் பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். மேலும், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சுபவாசுகி அவர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர்கள் இந்தப் பெரும் ஜனநாயகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வுப் பணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வாக்களிக்க ஏதுவாக விடுமுறை: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தேர்தல் நாளன்று தங்குதடையின்றி வாக்களிக்க ஏதுவாக, 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல்: அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புகார் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறை: தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி எண்கள்: 04562-294067, 04562-294068, 04562-294069 கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll Free): 1800 425 2166 ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.