25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 13, 2024

குழந்தைகளின் கல்விக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து காசோலை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (12.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருவில்லிபுத்தூர் வட்டம், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த திருமதி. பார்வதி என்பவர் தனக்கு 4 பெண்குழந்தைகள் உள்ளதாகவும், மிகவும் வறுமையான சூழ்நிலையில் குழந்தைகளை படிக்க வைத்து வருவதால் குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்யுமாறு மனு அளித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்லூரி பயிலும் 2 மாணவிகளுக்கு தலா ரூ.3000 /- வீதம் மொத்தம் ரூ.6000 /- த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் வழங்கினார்.

Aug 13, 2024

நூலகர் தின விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் (12.08.2024) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், நூலகர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி, வார்த்தை, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நூலகர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்நூலக அறிவியலின் ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு நூலகத்தை எப்படி பல்கலைக்கழகங்களாக உருவாக்க முடியும். சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வாசிப்பதற்கு எப்படி நூலகம் உறுதுணையாக இருக்கிறது. ஒரு நூலகத்தில் நூலகரின் பணிகள் என்னென்ன என்பவற்றையெல்லாம் குறித்து மிக விரிவான கோட்பாடுகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் நூலகத்தை செம்மையுடன் பேணுவது குறித்து தொடர்ச்சியாக யோசித்து சிறந்த நூலகராக இருந்த இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 12-ம் தேதி தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.நமது மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நூலகங்கள் அமைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களின் கீழ் நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு வருகின்றது.தற்போது கூட நமது மாவட்டத்தில் 25 நூலகங்களுக்கு மேல் புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கும், கட்டடங்கள் பழுது பார்ப்பதற்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இன்று கைபேசியில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அனைத்தும் இணையதளங்களில் கிடைக்கிறது. இன்றைய நவீன தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நூலகங்களுக்கான தேவை இருக்கிறதா என்ற ஒரு கேள்வி இருக்கிறது.ஆனால் ஒரு புள்ளி விவரத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் வாசிப்பதற்கு கிடைத்தாலும், இன்னும் முறையாக வாசிக்க கூடியவர்கள், ஒரு தலைப்பை எடுத்து அந்த தலைப்பில் முறையாக படிக்கக் கூடியவர்களுக்கு இணையமும் அதை ஒட்டி உள்ள தொழில்நுட்பங்களும் துணைக் கருவிகளாகத்தான் இருக்கின்றதே தவிர முழுமையாக வாசிப்பதற்கு என்று புத்தகங்கள் தான் ஒரு அமைப்பாகவே இருக்கிறது.இளைஞர்களும், புதிய தலைமுறையினரும் எந்தெந்த துறையினை வாசிக்கிறார்கள் என்பதில் தான் அவர்களுடைய அறிவு திறப்பு மாறி இருக்கிறது. பொது நூலகங்களில், புத்தகக் கண்காட்சிகளில், புத்தக விற்பனை நிலையங்களில் எல்லாம் ஜோதிடம் மற்றும் சமையல் கலை ஆகிய இரண்டு நூல்கள் தான் அதிகம் விற்பதாக புள்ளிவிவரமாக சொல்லப்படுகிறது.ஆனால் இதையும் தாண்டி அவர்கள் வசிப்பதற்கு எவ்வளவு துறைகள் இருக்கின்றன. ஒரு பொழுதுபோக்கு வாசிப்பில் கூட இன்று நிறைய மாற்றங்கள் உருவாகி இருக்கிறது. எனவே நூலகர்களின் தேவை முன்னெப்போதையும் விட தற்போது தான் அதிகமாக இருக்கிறது.இன்னும் நிறைய நூலகங்கள் கிராம புற பகுதிகளில்; இளைஞர்களை வாசிப்பதற்கு ஒரு மையமாக இருக்கிறது. இன்னும் நிறைய புதிதாக சிந்திப்பதற்கு வாசிப்பு தான் மிக அடிப்படை.நூலகங்கள் என்பது எல்லோரும் வந்து வாசிப்பதற்கு உரிய இடமாக உருவாக்குவதில் நூலகரின் பங்கு மிக முக்கியம். பெண்கள், கல்லூரி மாணவர்கள் வாசிப்பதற்கு அதற்குரிய இடமாக உருவாக்குவதற்கு நூலகரின் பங்கு மிக முக்கியமானது. தற்போது நமது மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறஇருக்கிறது.இந்தபுத்தகத்திருவிழாவையொட்டி நூலகர்கள் அந்தந்த நூலகங்களில் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் வந்து வாசிப்பதற்குரிய ஒரு இடமாக வாசிப்பு இயக்கமாக உருவாக்க வேண்டும்.இதனால் நூகலத்திற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். நூலகங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினால் தான், புதிய நூல்கள் வாங்குவதற்கான தேவைகள் ஏற்படும். எனவே நூலகங்களை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் வாசிப்பதற்குரிய ஒரு இடமாக நூலகர்கள்; அவற்றை அங்கு உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி நூலகர் முனைவர் யாஸ்மின், மாவட்ட நூலக அலுவலர்(பொ) திரு.சுப்பிரமணியன், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார் உட்பட நூலக பணியாளர்கள், நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2024

நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (12.08.2024) நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் நுண்ணூட்டசத்து, விதைநேர்த்தி உயிர் உரங்கள், ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள், பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் கடனுதவிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கான கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.அதன்படி, 200 விவசாயிகளுக்கு குதிரைவாலி விதை மற்றும் நுண்ணூட்டசத்து, விதைநேர்த்தி உயிர் உரங்களையும்,  நபார்டு நீர்வடிப்பகுதி திட்டம் மூலம் ஊராட்சிகளுக்கு வரத்துக் கால்வாய் மற்றும் பொது இடங்களில் நடுவதற்கு வன மரக்கன்றுகளையும்,வடக்குபுளியம்பட்டி நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.10 இலட்சம் மதிப்பில் கறவைமாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்புக்கான கடனுதவிகளையும்,பிள்ளையார் தொட்டியாங்குளம் நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் தையல் கடை மற்றும் வெள்ளாடு வளர்ப்புக்கான கடனுதவிகளையும்,எழுவாணி நபார்டு நீர்வடிப்பகுதி நெல் பயிர் விவசாயிகள் பயன் பெறும் வகையில் 2 பயனாளிகளுக்கு வரிசை நெல் நடவு இயந்திரங்களையும்,எருமைக்குளம் நபார்டு நீர்வடிப்பகுதி சார்பாக எழுவாணி பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் நிதியுதவியினையும்,SEEDS – Syncom Agri Tech Ltd சார்பில் காரியாபட்டி, திருச்சுழி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களில் 368 விவசாயிகளின் நிலத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் சாகுபடி செய்யும் 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Aug 13, 2024

சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் 15.08.2024 அன்று ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

 விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளில்   மேற்கொள்ளப்பட்டு வரும் தகுதியுடைய மகளிரைக் கொண்டு குழு அமைத்தல், உரிய காலத்தில் கடன் மதிப்பீடு செய்து கடன் பெற்றுத் தருதல், தகுதியான குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிஃசுழல் நிதி பெற்றுத் தருதல், திறன் வளர்ச்சிக்கு திட்டமிடுதல், குழுக்களிடையே வருவாய் பெருக்கும் செயல்பாடுகளை ஏற்படுத்துதல் ஆகிய திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து  எதிர்வரும் 15.08.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்திய சுதந்திர தினத்தன்று ஆண்டு பொதுக் குழு கூட்டத்தினை உரிய முறையில் நடத்தி தீர்மானம் இயற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 10, 2024

இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு நடைபெற்ற ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு நடைபெற்ற ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (09.08.2024) தொடங்கி வைத்தார்.இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம்  வெளியிட்டுள்ள 7951 பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போட்டித் தேர்வு என்பது பயிற்சி பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்குமான ஒரு போட்டியாகும். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் இடையில் உழைப்பு, படிப்பு ஆகியவற்றில் பெரியதாக வேறுபாடுகள் இருக்காது. ஆனால் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய மதிப்பெண்களில்  சிறு இடைவெளி தான் இருக்கின்றன.ஆனால் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்று எடுத்து பார்த்தால், சில நுணுக்கங்களை அவர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் மறுபடியும் அந்த தேர்வு எழுதுவதற்கு ஓராண்டு ஆகிவிடும். இதனால் கால தாமதமாகும். கல்லூரி படித்தவர்களில் அவர்களுடைய மிக முக்கியமான வாழ்க்கை காலகட்டத்தில் ஓராண்டு என்பது மிகவும் முக்கியமானதாகும்.சில நேரங்களில் அடுத்து அதற்காக தயார் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம். அதனால் தான் எந்த ஒரு இது மாதிரியான சிறப்பு வேலைக்கு சென்றாலும் ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்றாலும், போட்டித் தேர்வுகள் தயார் செய்யக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி மிக முக்கியமானது. விளையாட்டு, படிப்பு என எந்த ஒரு போட்டிக்கும் சிறப்பான நுணுக்கங்கள் இருக்கும். அந்த நுணுக்கங்களை தாங்களாகவே தவறுகள் மூலம் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெறுவதற்கு காலம் ஆகும்.அதற்கான கால விரையத்தை குறைக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இப்பயிற்சிகள் மூலம் கவனக் குறைவு, தவறுகளை தவிர்த்தல் போன்றவைகள் பற்றி பயிற்சி அளிக்கும் போது அவர்கள் நல்ல முறையாக தேர்வு எழுத முடியும் என்பதற்காக தான் இந்த பயிற்சி.பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், கல்லூரி முடித்து போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும் நான் முதல்வன் என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.அதில் குறிப்பாக இத்திட்டத்தில் போட்டித் தேர்வுக்கு என்று தனி ஒரு அமைப்பு மூலமாக நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவில் நிறைய பயிற்சிகள் வழங்குகின்றார்கள்.இந்தியா முழுவதும் ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.இதில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் நிறைய பேர் ஆங்கிலம் கணிதம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த இடைவெளியை நாம் நீக்க வேண்டும் என்ற நோக்கில் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.குறிப்பாக தமிழ்நாடு அரசினுடைய வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, நான் முதல்வன் இணையதளம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஆகியவற்றின் இணையதளம் மற்றும் யூ-டியூப் மூலம் நடத்தப்படும் 20 மணி நேர ஆங்கிலம், திறனறிவு உள்ளிட்ட வகுப்புகளில் பயிற்சி செய்யும் போது நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.அதில் நீங்கள் அதிகமான வினாக்களுக்கு பதில் அளிக்கக் கூடிய அளவிற்கு இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவி செய்யும். இன்றைக்கு நிறைய பேர் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பார்க்கும்போது, முழுக்க இணைய வழியில் பயிற்சி செய்து இணைய வழியில் மாதிரி வினாத்தாள்களை எடுத்து அதில் முறையாக பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகையால் இதன் மூலமாக மூலமாக தெரிந்து கொள்ள வேண்டியது முறையாக நீங்கள் பயிற்சி பெற்று, அந்த பயிற்சியில் வழங்கக்கூடிய நுணுக்கங்கள் அடிப்படையில் கடினமாக உழைத்தால் நிச்சயமாக போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான இலவச பாடக்குறிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.

Aug 10, 2024

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், தேசப்பந்து மைதானத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள்  (09.08.2024) துவக்கி வைத்தார்.பின்னர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலமாக மழைநீர் சேகரிப்பு தொடர்பான  குறும்படங்கள்/குறும்பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி, வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு,   தமிழ்நாடு  முழுவதும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆண்டுதோறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.மழைநீர் சேகரிப்பு என்பது  மழைநீரை  வீணாக்காமல் சேமித்து வைப்பதாகும். மேலும், மழைநீரை சேமிப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, வீடுகள் , நிறுவனம், கடைகள் , பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழைநீரை சேகரிப்பதால், கோடைகாலங்களில் வரும் தண்ணீர் பிரச்சினையை தவிர்க்க முடியும்.மேலும், திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம், வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்சுவதால், சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கவும், கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்க முடிகிறது.  நம் மக்களிடையே பல்வேறு வகையான நோய்கள் அதாவது, காலரா, காய்ச்சல் , வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, இருமல், வாந்தி போன்ற நோய்கள் நீரின் மூலம் பரவுகின்றன.அதனை தடுப்பதற்கு, குடிக்கும் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் நீரை குடிப்பதை  தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.த.கென்னடி மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், இளநிலை நீர் பகுப்பாய்வாளர், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 10, 2024

"தமிழ் புதல்வன்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை(

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (09.08.2024) கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து,விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைத்து, 8431 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், தமிழ்  பெருமிதம் புத்தகம் அடங்கிய "தமிழ் புதல்வன்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை(Debit Card)களை வழங்கினார்கள்.தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதுமைப் பெண் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய சூழலுக்கேற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் சமூகநலன் மற்றும் மகளிர்; உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில்  அரசு பள்ளிகளில் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு மாணவியருக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டமானது தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 5968 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று மாதாந்திரம் ரூ.1000/- அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து, தற்போது ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ் புதல்வன் என்னும் மாபெரும் திட்டமானது 09.08.2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இத்திட்டத்திற்காக 2024-2025 ஆம் நிதியாண்டில் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை அரசு மற்றும்  அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று, கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட 50 கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வரும் 8431 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம்தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.

Aug 10, 2024

Coffee With Collector” என்ற 92-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.08.2024) சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து  சிறந்து விளங்கக்கூடிய 30 கல்லூரி மாணவர்களுடனான ""Coffee With Collector”  என்ற 92- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  92-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Aug 10, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.08.2024 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16.08.2024 அன்று காலை 11.00 மணியளவில்; விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில், விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்   கேட்டுக் கொள்கிறார்கள்.

Aug 10, 2024

Coffee With Collector” என்ற 93-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (09.08.2024)  ராஜபாளையம் ஸ்ரீ ரமணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலிருந்து  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 42 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”    என்ற 93- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 93-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.12-ஆம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 69 70

AD's



More News