டபிள்யு. டி.டி., டேபிள் 'கன்டெண்டர்' டென்னிஸ் தொடர் டுனிசியாவில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட் டாலே ஜோடி, ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியை சந்தித்தது. .இந்திய ஜோடி 3-2 (11-9, 5-11, 14-12, 3-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' கலப்பு இரட்டையரில் பட்டம் வென்ற 2வது இந்திய ஜோடியானது.இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி, 2-3 (11-8, 7-11, 11-8, 9-11, 10-12) என்ற கணக்கில் ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா, ஆன்ட்ரி பெர் டெல்ஸ்மியர் ஜோடியி டம் .ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. குத்து சண்டை 15,17 வயதுக்குட்பட்டோருக் கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்ஜோர்டானில் நடக்கிறது. நேற்று, 17 வயதுக்குட் பட்டோருக்கான காலிறுதி போட்டி நடந்தது.பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், ஜோர்டானின் அயா அல்ஹாசனாத் மோதினர். சிம்ரன் ஜீத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பின், 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஹிமான்ஷி, பாலஸ்தீனத்தின் பராஹ் அபூ லைலாவை வென்றார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அமன் சிவாச் (63 கிலோ), தேவன்ஷ் (80 கிலோ) வெற்றி பெற்றனர். இந்தியாவுக்குஇத்தொடரில் 43 பதக்கம் உறுதியானது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 18 பதக்கம்,15 வயதுக்குட்பட் டோர் பிரிவில் 25 பதக்கம் வென்றனர்.
ஆசியயோகாசனபோட்டிசாம்பியன்ஷிப் டில்லியில் நடந்தது.இந்தியா,நேபாளம்,இலங்கை,ஜப்பான்,தாய்லாந்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 21 நாடுகள் பங் கேற்றன. இதில் இந்திய நட்சத்திரங்கள் 83 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 87 பதக்கங்களை அள்ளினர்.
APRIL 24-ம் தேதி சென்னையில், ஐதராபாத் சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 154/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 155/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HARSHAL PATEL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக டேபிள் டென்னிஸ் டுனிசியாவில் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று நடந்தது. தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய இந்தியாவின் தியா சிட்டாலே, இத் தொடரின் 'நம்பர் -7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 'நம்பர்-1' வீராங்கனை பத்ராவை சந்தித்தார்.தியா முதல் செட்டை 12-10 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்டை மணிகா 11–5, 11–9 வசப்படுத்தினார். கடைசி இரு செட்டில் தியா 11-4, 11-4 என ,முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் மணிகாவை வீழ்த்தினார்.டென்னிஸ் துருக்கியில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு இந்தியாவின் காலிறுதியில் வைஷ் ணவி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பேமோதினர். வைஷ்ணவி6,1, இதில்6,3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, அமெரிக்காவின் இண்டியா ஹவுட்டன் ஜோடி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பே, காட் கோபஸ் ஜோடியை கொண்டது. இதில் வைஷ்ணவி ஜோடி 5-7, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
APRIL 24-ம் தேதி பெங்களூரில், ராஜஸ்தான், பெங்களூர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 205/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 194/9 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்து, பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOSH HAZLEWOOD தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம் கொச்சியில், 28வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப் போட்டியில் ஜே.எஸ். டபிள்யு., அணிக்காக விளையாடிய தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 23, அதிகபட்சமாக 17.37 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா (1.82 மீ.,) வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உ.பி.,யின் அன்னு ராணி (56.66 மீ.,) தங்கப்பதக்கம் வென்றார் .பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 23.91 வினாடி யில் கடந்த தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா வெள்ளி வென்றார். ஆண்களுக் கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய தூரத்தை 20.85 வினாடியில் அடைந்த தமிழகத்தின் ராகுல் குமார், வெண் கலம் வென்றார்.
ஜெர்மனியில் கிரென்கே செஸ் தொடர் ஓபன் பிரிவில் 875 பேர் கள மிறங்கினர். இந்தியா சார்பில் அஸ்வத், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் அஸ்வத், மங்கோலியாவின் முகமது முராடிலியை எதிர்கொண்டார்.கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய அஸ்வத், துவக் கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
டேபிள் டென்னிஸ் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் டுனிசியாவில் நடக்கிறது ஒற்றையர் தகுதிச்சுற்று நடந்தன. பெண்கள் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தியா சிட்டாலே, ருமேனியாவின் எலினா ஜஹாரியாவை சந்தித் தார். முதல் செட்டை 6-11 என இழந்த தியா, அடுத்த செட்டை 11-9 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த கடைசி செட்டை 12-10 என போராடி வென்றார். முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கோல்ப் ஹரியானாவில் இந்திய கிளாசிக் கோல்ப் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் இரு சுற்று முடிவில் 67,73 ஸ்டிரோக்குடன் கோல்கட்டாவின் விராஜ் மடப்பா நான்காவது இடத்தில் இருந்தார். நேற்று கடைசி சுற்று போட்டி நடந்தது. இதில் சிறப்பாக செயல் பட்ட விராஜ், 65 ஸ்டிரோக் பெற்றார். இதையடுத்து 205 ஸ்டிரோக்குடன் (67, 73, 65) முதலிடத்துக்கு முன்னேறி கோப்பை வென்றார்.
தடகள போட்டி 28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகளபோட்டி கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கான 400மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், இலக்கை 56.04 வினாடியில் கடந்த தமிழகத்தின் வித்யா ராம் ராஜ், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றார். ஆசிய சாம்பி யன்ஷிப் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்திற்கான ஃ தகுதி இலக்கை(57.80வினாடி) விட வேகமாக வந்த வித்யா, இத்தொ டரில் தனது 2வது பதக்கத்தை வென்றார்.குத்துசண்டை 15, 17, வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில். நேற்று,15 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதி நடந்தன. ஆண்களுக்கான 46 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ருத்ராக்ஷ், கிர்கிஸ்தானின் ஐதர்முசேவ் மோதினர். ருத்ராக்ஷ் 3-0 என்றகணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.ஆண்களுக்கான 37 கிலோ பிரிவு காலிறு தியில் இந்தியாவின் ஹர்சில் 5,0 என, துர்க் மெனிஸ்தானின் செர்டரோவை தோற்கடித்தார். ஆண்களுக்கான 49 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சஞ்சித் ஜயனி5-0 எனசீனதைபேயின் சென்-என்யுவை வென்றார். மற்றஎடைப்பிரிவு காலிறுதியில் இந்தியா வின் சன்ஸ்கர் வினோத் அத்ரம் (35கிலோ), பிரிக் ஷித் பலஹ்ரா(40 கிலோ)வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.பெண்களுக்கான 43 கிலோ பிரிவு காலிறுதி யில் இந்தியாவின் மில்கி மெய்னம் 5-0 என கஜகஸ் தானின் அப்திகானியை வென்றார். மல்யுத்தம் (20 வயதுக்குட்பட்டோருக்கான) ராஜஸ்தானில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 76 கிலோ பிரிவில் பிரியா மாலிக் களமிறங்கினார். 20 வயதுஉலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கைப்பற்றிய பிரியா, மீண்டும் தேசிய சாம்பியன் ஆனார்.17 வயதுபிரிவு உலக சாம்பியன்ஷிப்பில் ஹர்சித்தா(72கிலோ), சுராஜ்(60கிலோ,கிரிகோ ரோமன்) தங்கம்வென்றனர்.. 62 கிலோபிரிவில்,'உலக' தொடரில் வெள்ளி வென்ற நிகிதா, இம்முறை வெண்கலம் தான் வெல்ல முடிந்தது. மஹாராஷ்டிராவின் பிரகதி தங்கம் வென்றார். தவிர, ஜஸ்பூரன் சிங்(125கிலோ), ரீனா(55),சங்வான்(57)உள்ளிட்டோர் தங்கள் பிரிவுகளில் தங்கம் வசப்படுத்தினார்.ஒட்டுமொத்தமாக பிரீஸ்டைல், கிரிகோ ரோமன் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சிறப்பாக செயல் பட்டஹரியானா ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. டில்லி அணி இரண்டாவது இடம் பிடித்தது. செஸ் ('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்ட மைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' தொடர் 5ம் கட்ட போட்டிகள் புனேயில் நடந்தது. இந்தியாவின் ஹம்பி, திவ்யா தேஷ்முக்,வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி உட்பட 10 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி, 9வது சுற்று போட்டி நடந்தன. முடிவில் இத்தொடரில் ஒருபோட்டியில் கூட தோற்காத ஹம்பி,7.0 புள் ளியுடன் முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ.17.50 லட்சம் பரிசு கிடைத்தது. ஜு ஜினெர் (7.0 புள்ளி, 1 தோல்வி, ரூ. 12.60 லட்சம்) இரண்டா வது, திவ்யா (5.5, ரூ.10.20 லட்சம்) மூன்றாவது இடம்பெற்றனர்.
APRIL 23-ம் தேதி ஐதராபாத்தில், மும்பை, ஐதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 143/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 146/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக TRENT BOULT தேர்ந்தெடுக்கப்பட்டார்.