பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில்.நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் திவ்யா, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார்.திவ்யா,49 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். திவ்யா 1.00 என முன்னிலையில் உள்ளார். இன்றைய இரண்டாவது போட்டியில் 'டிரா' செய்தால் காலிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. .
ஜப்பான் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டோக்கியோவில்பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் சிம் யு ஜின் மோதினர். இதில் சிந்து 15,-21,14,-21 என தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 8-21, 12-21 என தாய்லாந்தின் போர்ன் பாவி சோச்சுவாங்கிடம் சரிந்தார்.முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா 21-15, 18/21,21/18 என சகவீராங்கனை ரக்ஷிதாஸ்ரீயை வென்றார்.முதல் சுற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ,இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் வாங் ஜெங் ஜிங்கை 21–11, 21-18 என வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21/18,21/10 என தென் கொரியாவின் காங் மின் ஹயுக், கி டோங் ஜு ஜோடியை வீழ்த்தியது.
.கிரிக்கெட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 12 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது. சிராஜும் அவுட்டாக, ஜடேஜா செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனால், இங்கிலாந்து சரியாக திட்டம் வகுத்து வெற்றியை பறித்துச் சென்றது.முதல்3 போட்டிகளிலும் இரு அணிகளும் கடைசி வரை போராடின. இங்கிலாந்து 2,1 என முன்னிலை பெற்றாலும், இரு அணிகளும் சமபலத்தில் காணப்பட்டன. ஒட்டுமொத்தமாக உயர்தர டெஸ்ட் போட்டிகளைகாண முடிந்தது.இதன் பின் இந்திய அணி வீரர்கள், நான்காவது டெஸ்ட்(ஜூலை23,27) நடக்கவுள்ள மான்செஸ்டருக்கு கிளம்பிச் சென்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள்இங்கிலாந்து மன்னர் சார்லசை சந்தித்தனர்.இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர் மன்பிரீத் கவுர் கூறுகையில்," இதற்கு முன் பலமுறை இங்கிலாந்து வந்துள்ளோம். முதன் முறையாக இப்போது தான் இங்கிலாந்து மன்னரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறந்த அனுபவமாக இருந்தது," என்றார்.
பெண்களுக்கான உலகசெஸ் கோப்பை தொடர்ஜார்ஜியாவில் ,46 நாடுகளில் இருந்து107 பேர் பங்கேற்கின்றனர்.'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம் பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின்'சீனியர்' வீராங்கனை ஹரிகா, கிரீசின் ஸ்டாவ்ரவுலாவை சந்தித்தார். முதல் இரு போட்டி 'டிரா'ஆக, வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'டை பிரேக்கர்' முதல் இரு போட்டி 'டிரா' ஆனது. 3வது போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். அடுத்து 4வது போட்டியில் ஹரிகா, 28 நகர்த்தல் வரை பின்தங்கி இருந்தார். 29 வது நகர்த்தலில். ஹரிகா வெற்றி பெற்றார். முடிவில் 4.0-2.0 என வென்ற ஹரிகா, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் வைஷாலி, அமெரிக்காவின் காரிசா மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற இப்போட்டியில் வைஷாலி 4.0-2.0 என வென்றார்.செஸ் உலக கோப்பை தொடரின் 4வது சுற்றுக்கு, முதன் முறையாக இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் (ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா) தகுதி பெற்றனர்.
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன்எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன் எடுத்தது.பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் 58/4 ரன் எடுத்திருந்தது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வெற்றிக்கு இன்னும் 135 ரன் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட் இருந்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜடேஜா(61) அவுட்டாகாமல் இருந்தார்.லார்ட்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரில் 2,1 என முன்னிலை பெற்றது.நான்காவது டெஸ்ட் வரும் ஜூலை 23ல் மான் செஸ்டரில் துவங்குகிறது.
உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் அமெரிக்காவில், ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த பைனலில் இங்கிலாந்தின் செல்சி, பிரான்சின் பாரிஸ்-செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகள் மோதின. செல்சி அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி அணி சார்பில் பால்மர் 2 (22, 30வது நிமிடம்), ஜோவோ பெட்ரோ (43வது) ஒரு கோல் அடித்தனர். செல்சி அணி 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன் 2021-ல் கோப்பை வென்றிருந்தது.
ஏ.டி.பி., டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். லண்டனில் நடந்த விம்பிள்டன் பைனலில் அசத்திமுதல் கோப்பை வென்றார். இத்தொடரில் பைனல் வரை சென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்,2வது இடத்தில் நீடிக்கிறார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 4வது இடத்துக்கு முன்னேறினார். செர்பியாவின் ஜோகோவிச், 6வது இடத்தில் தொடர்கிறார். பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் போலந்தின் இகாஸ்வியா டெக்,4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். விம்பிள்டன் பைனலில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-4' போலந்தின் இகா ஸ்வியாடெக் 24, 'நம்பர்-12' அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 23, மோதினர். முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டையும் 6-0 என வென்றார்.மொத்தம் 57 நிமிடம் நீடித்த பைனலில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சுலபமாக வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்மு றையாக கோப்பை வென்றார்.இது, இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.விம்பிள்டன் பைனலில் 6-0, 6-0 என வெற்றி பெற்ற 2வது வீராங்கனையானார் ஸ்வியாடெக். 'ஓபன் எரா'வில் இப்படி வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ஸ்வியாடெக் ஸ்வியாடெக், ரூ.35 கோடி, 2வது இடம் பிடித்த அனிசிமோவா, ரூ.17 கோடி பரிசு பெற் றனர்.விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் ஸ்வியாடெக்கிடம்(போலந்து) தோற்ற அனிசிமோவா(அமெரிக்கா) கோப்பையை கோட்டைவிட்ட. இந்த சோகத்தில் அழுத அனிசிமோவா கூறுகையில்,"எனது வளர்ச்சிக்காக பல தியாகங்களை செய்தவர் அம்மா. பைனலை காண புளோரிடாவில் இருந்து லண்டன் வந்த அம்மாவுக்கு நன்றி. தோல்விக்காக ரசிகர்களிடம் 'சாரி' கேட்கிறேன்," என்றார்.
உலக தடகள கான்டினென்டல் 'சன்செட் டூர்' அமெரிக்காவில் ,1500 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் குல்வீர்சிங் களமிறங்கினார். சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த ஆசிய தட கள சாம்பியன்ஷிப்பில் 5000,10000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், இம்முறை 3 நிமிடம், 36.58 வினாடி நேரத்தில் வந்து, நான்காவது இடம் பிடித்தார். புரூக் பீஸ்ட் அணியின் பிரண்டன் மில்லர் (3:35.27), ஆக்லஹாமா பல்கலை., வீரர் ரியான் ஷோப்பே (3:36.13), டெக்சாஸ் வீரர் கூப்பர் (3:36.38) முதல் மூன்று இடம் பிடித்தனர். குல்வீர் சிங் 3000,5000,10,000 மீ.,'ஷார்ட் டிராக்' பிரிவில் 3000,5000 மீ., என ஐந்து வித போட்டியில் பங்கேற்று, அனைத்திலும் தேசிய சாதனையாளராக உள்ளார். தேசிய சாதனையாளர்.
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில்,மூன்றாவது போட்டி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங் சில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது, பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால்(0), கருண்(14), சுப்மன்(6) ஏமாற்றினார். 4வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 58/4 ரன் எடுத்திருந்தது. ராகுல் (33) அவுட்டாகாமல் இருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் ஆனார், இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் நேற்று 4 விக்கெட் சாய்த்தார். 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் ,இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி ,முதல் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது, கடைசி போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவரில் 167/7 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 168/5 ரன் எடுத்து,5 விக்கெட்டில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 3-2 என, கோப்பை வென்றது.