சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தில் ,மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.மூன்றாவது சுற்றில் குகேஷ்-அர்ஜுனை சந்தித்து,34 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, செக் குடியரசின் வான் நிகுயேனை ,களமிறங்கிய பிரக்ஞானந்தா, நீண்ட போராட்டத்துக்குப் பின் 75வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். நோடிர் பெக் (உஸ்பெகிஸ்தான்) இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், மோதிய போட்டி, 42 நகர்த்தலில் 'டிரா' ஆனது பிரக் ஞானந்தா (0.5) கடைசி (14) இடத்துக்கு தள்ளப்பட்டார்.மூன்று சுற்று முடிவில் குகேஷ் (1.5), அரவிந்த் (1.5) 7, 8வது இடத்தில் உள்ளனர்.
மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்-2' வீரர், இத்தாலியின் சின்னர், 93வது இடத்திலுள்ள பிரான்சின் ஹியுகோ காஸ்டனை சந்தித்தார்.முதல் இரு செட்டை சின்னர் 6-2, வசப்படுத்தினார். ஹியுகோ காயம் காரணமாக வெளியேற, சின்னர் வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டார். உலகின் 'நம்பர்-5' வீராங்கனை, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா பெண்கள்ஒற்றையர் முதல் சுற்றில், சுலோவேனியாவின் கஜா ஜுவனை எதிர் கொண்டார். முதல் இரு செட்டையும் 6-4, 6-3 என வசப்படுத்திய ரிபாகினா, வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
உலக சாம் பியன்ஷிப் அரங்கில் வெள்ளி (2015) வென்ற ,இந்தியபாட்மின்டன் வீராங்கனை ,கடந்த 2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரி சையில் 'நம்பர்-1' இடம் பிடித்த செய்னா நேவல் 35 பாட்மின்டன் அரங்கில் இருந்துஓய்வு பெற்றுள்ளார் 2016 முதல் முழங்கால் காயம் இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன் வெல்த்தில் தங்கம் கைப்பற்றினார். கடந்த 2024 முதல் காயம் அதிகரிக்க, சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் “எனக்கான நேரம் முடிந்து விட்டது, இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், பாட்மின்டனில் இருந்து விடை பெறுகிறேன். இந்த ஓய்வு முடிவை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ,உலக டென்னிஸ் சங்கம் சார்பில் ஆடவருக்கான 'ஆதித்யன் ஐ.டி. சர்வதேச எப்.எம்-25' டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 12க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, சர்வதேசவீரர்கள் பங்கேற்றனர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் இறுதிப்போட்டி, நெதர்லாந்தின் மேக்ஸ் ஹாக்கிஸ், நீல்ஸ் விஸ்கர் மோதினர். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில், மேக்ஸ் ஹாக்கிஸ் 6-3, 6-7, 6-3 என வென்று கோப்பை கைப்பற்றினார். 3.97 லட்சம் ரூபாய் பரிசு, 25 'ஏடிபி' புள்ளிகள் பெற்றார். டி.என். டி.ஏ. தலைவர் விஜய் அமிர்தராஜ் இவருக்கு கோப்பையை வழங்கினார்.
சர்வதேச பாரா பாட் மின்டன் தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு 5) பிரிவு பைனலில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த, துளசிமதி முருகேசன் 23,போர்ச்சுகலின் பியாட்ரிசை எதிர் கொண்டார்.துளசிமதி, 21-8, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். * பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோடி, பைனலில் 21-8, 21-10 என இந்தியாவின் துலிகா, பியாட்ரிஸ் (போர்ச்சுகல்) ஜோடியை, வென்றுதங்கம் கைப்பற்றியது. இந்தியாவின் துளசிமதி, நிதிஷ் குமார் ஜோடி, கலப்பு இரட்டையர் பைனலில் 21-15, 21-8 என்ற நேர் செட்டில், இந்தியாவின் ருத்திக், மானசி ஜோடியை சந்தித்து, தங்கம் வென்றது. இந்தியாவின் பிரமோத் பஹத், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 19-21, 21-15-21-13 என்ற செட் கணக்கில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற சக வீரர் உமேஷ் விக்ரம் குமாரை வென்று, தங்கம் கைப்பற்றினார். இந்தியா இத்தொடரில் 8 தங்கம், 9 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ் மோதினர். ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் 100வது வெற்றி.இங்கு விளையாடிய 110 'போட்டியில், 100 வெற்றி, 10 தோல்வியை சந்தித்தார்.
69வது தேசிய பள்ளி விளை யாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில் ,14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடகம், மேற்குவங்கம் உட்பட 32 அணிகள் பங்கேற்றன. தமிழக அணியில் அகில் சேது, சஞ்சய் நாராயணன், தனிஷ் ராகவன், மால்வின் ஜோஷுவா, பவ்ஜன் இடம் பெற்றனர். முதல் போட்டியில் தமிழக அணி 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானை வென்றது. அடுத்து பஞ்சாப் (3.5-0.5), மகாராஷ்டிரா (3.0-1.0), குஜராத்(3.0-1.0) அணிகளுக்கு எதிரான போட்டி உட்பட, மொத்தம் பங்கேற்ற 6 போட்டிகளிலும் தமிழகம், 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்று, சாம்பியன் ஆனது. மேஹா, பவித்ரா, பூஜா ஸ்ரீ, சாருதர்ஷினி, பிரகன்யா ,பெண்கள்பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி, பங்கேற்ற 6 போட்டியிலும் வெற்றி பெற்று,. 12 புள்ளியுடம்முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனது.
வங்கதேசத்திற்கு, 'உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும்," என, ஐ.சி.சி., கெடு விதித்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான மனநிலைவங்கதேசத்தில் நிலவுகிறது. இதனால், வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.'டி-20' உலக கோப்பை தொடரில் ,இதற்கு பதிலடியாக, (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுத்து. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பலமுறை வேண்டுகோள் விடுத்தது. 'போட்டி அட்டவணை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. வங்கதேச அணி, இந்தியாவில் பங்கேற்பது குறித்து எவ்வித மிரட்டல் அல்லது நேரடி எச்சரிக்கை எதுவும் வரவில்லை. ஐ.சி.சி., தரப்பில் இந்தியாவில் விளையாடுவது குறித்து நாளைக்குள் முடிவு எடுக்கவேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் இந்தியா லீக் புவனேஸ்வர், ராஞ்சி, சென்னையில், நடக்கிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் . நேற்று, நடந்த லீக் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதின.இதுவரை விளையாடிய 7 போட்டியில், 3 வெற்றி, 4 தோல்வி என, 9 புள்ளிகளுடன் பெங்கால் அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. 8வது இடத்தில் நான்காவது தோல்வியை பெற்ற டில்லி அணி 4 புள்ளி) நீடிக்கிறது.
டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன்நெதர்லாந்தில், மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ்கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர்விளையாடுகின்றனர்.இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசிமுதல் சுற்றில் மோதினர். 32வது நகர்த்தலில் ,வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்று போட்டியில் 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் ,உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்ட ரோவ் மோதி 78வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.வின்சன்ட் கீமர் (ஜெர் மனி), அர்ஜுன் (இந்தியா), ஹான்ஸ்நீமன் (அமெரிக்கா) முதல் சுற்றின் முடிவில் தலா 1 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.