3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கஇந்தியா வந்துள்ள நியூ சிலாந்து அணி, முதல் போட்டி நேற்று குஜராத்தின் வதோதராவில் நடந்தது. இந்திய அணியில் புது முயற்சியாக 3 'வேகம்', 3 - 'ஸ்பின்னர்' என 6 பவுலர்கள் இடம் பெற்றனர். இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். இரண்டாவது போட்டி ஜன. 14ல் ராஜ் கோட்டில் நடக்க உள்ளது.
பெண்கள் பிரிமியர் லீக் -டி-20') தொடருக்கான போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் குஜராத், டில்லி அணிகள் மோதின. குஜராத் அணி 20 ஓவரில், 209 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டில்லி அணி சார்பில் நந்தனி 5 விக்கெட் வென்றார்.டில்லி அணி 20 ஓவரில் 205/5 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பைனலில் உக்ரைனின் கோஸ்டியுக்கை வென்று பெலாரஸ் வீராங்கனை சபலென்கா கோப்பை வென்றார்.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் உ.பி.,யின் கிரேட்டர் நொய்டாவில்பெண்களுக்கான75 கிலோ பிரிவு பைனலில் அசாமின் லவ்லினா 5-0 என்ற கணக்கில் ரயில்வே அணியின் சனமாச்சா சானுவை வென்று தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 51 கிலோ பிரிவு பைனலில் தெலுங்கானாவின் நிகாத் ஜரீன்5,0 என, தங்கத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான55 கிலோ பிரிவு பைனலில் சர் வீசஸ் அணியின் ஜடுமானி சிங்5,0 என, சகவீரர் பார்த் வால் பவானை வென்றார்.மொத்தம்12 தங்கம் வென்ற சர்வீசஸ் அணி, முதலிடம் பிடித்தது.
பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி-20') இந்தியாவில், பெண்களுக்கான 4வது சீசன் நேற்றுதுவங்கியது. நவி மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள பெங்க டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று, நடந்த முதல் போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது..பெங்களூரு அணி 20 ஓவரில் 157/ 7 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் உ.பி.,யில் முதன் முறையாக ஆண்கள், பெண்களுக்கான தொடர் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.10 பிரிவுகளில் இந்தியாமுழுவதும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.அரையிறுதிபோட்டிகள் நேற்று ,51 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் இரு முறை பதக்கம் வென்ற நிஹாத்ஜரீன், உ.பி.,யின் குசும் பஹலை 4:1 என்ற கணக்கில் வென்று பைனலுக்குள் நுழைந்தார்.அசாமின் லவ்லினா, 5:0 என உ.பி.,யின் இம்ரோஸ்கானை சாய்த்து, 75 கிலோ பிரிவு அரையிறுதியில் பைனலுக்கு முன்னேறினார். ஹரியானாவின் பூஜா ராணி (80 கிலோ), 5:0 என உ.பி.,யின் ஸ்நேகாவை வென்றார். மீனாட்ஷி ஹூடா (48), பிரீத்தி (54), அருந்ததி (70) மற்ற அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்றனர்.ஆண்கள் 55 கிலோ பிரிவு அரையிறுதியில் சர்வீசஸ் வீரர் ஜடுமானி சிங், 5:0 என சகவீரர் அமித் பங்கலை வென்று, பைனலுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில்சர்வீசஸ் வீரர் நரேந் தர் (90+), பெட்ரோலிய அணியின் நமன் (90) வென்றனர்.
டபிள்யு.டி.டி., சாம்பியன்ஸ் டேபிள் டென்னிஸ் தொடர் கத்தார்தலைநகர் தோஹாவில் இந்தியா சார்பில் மானவ் தக்கார் 25, பங்கேற்கிறார். உலகத்தரவரிசையில் 34 வது இடத் திலுள்ள இவர், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 17வது இடத்திலுள்ள பிரான் சின் சைமன் காஜியை சந்தித்து,முதல் செட்டை 11-8 என மானவ் தக்கார் கைப்பற்றினார். அடுத்த இரு செட்டுகளை 7-11, 9-11, என இழந்தார். 4, 5வது செட்டுகளை 11-7, 11-8 என வசப்படுத்தினார்.35 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் மானவ் தக்கார், 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். உலகின் 'நம்பர்-4' வீரர், சுவீடனின் டிரல்ஸ் மோர் கார்டுவை அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சந்திக்க உள்ளார்.
டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் கோல்கட்டாவில் இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட் முறையிலான போட்டி (9 சுற்று) நடந்தன. நேற்று மூன்றாவது கடைசி 3 சுற்று நடந்தன. 7வது சுற்றில் நிஹால் சரின், பிரக்ஞா னந்தா, ஆனந்த் விதித் குஜ்ராத்தி மோதிய போட்டி 'டிரா' ஆகின. 8வது சுற்றில் நிஹால் சரின், அமெரிக்காவின் வெஸ்லேயை வீழ்த்தினார். ஆனந்த்-பிரக்ஞானந்தா மோதிய போட்டி டிரா ஆனது.ஆனந்த்-நிஹால் சரின் மோதிய கடைசி சுற்று ” 'டிரா' ஆனது. முடிவில் 2 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த நிஹால் சரின் சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ, 6.5 புள்ளி எடுத்து பெண்கள் பிரிவில் முதலிடம்பெற்று, சாம்பியன் ஆனார். ரஷ்யாவின் அலெக்சா கோர்யச்கினா 2 (இந்தியாவின்திவ்யா (4.5) இடம் பெற்றனர்.
மலேசியாவில் சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் மலேசியாவில் ,பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்து 30, ஜப்பானின் யமாகுச்சியை எதிர்கொண்டார்.முதல் செட்டை சிந்து 21-11 என எளிதாக கைப்பற்றினார். முழங்காலில் காயத்தால் அவதிப்பட்ட யமாகுச்சி, போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். சிந்து வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட, அரையிறுதிக்கு முன்னேறினார்., சீனாவின் வாங்ஜியியை , சிந்து சந்திக்க உள்ளார்.
சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் கோல்கட்டாவில் இந்தியாசார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.முதலில் 'ரேபிட்' முறையிலான போட்டி நடக்கின்றன.நேற்று நடந்த 3 சுற்றில்ஆனந்த், சக வீரர் அர்ஜுன் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 58 வது நகர்த்தலில் ஆனந்தை வென்றார்.இந்தியாவின் நிஹால் சரின், 4வது சுற்றில்ஹன்ஸ் மோக், 5வது சுற்றில் முர்ஜினை வென்றார். சக வீரர் விதித் குஜ்ராத்தியை 6வது சுற்றில் வென்று, தொடர்ந்து 3 வெற்றியை பதிவு செய்தார்.