25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Jul 12, 2025

பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளம்..

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளத்தின் 7வது சீசன் பெங்களூருவில், நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப் 12-எப்64' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 72.25 மீ., எறிந்த ஹரியானாவின் சுமித் அன்டில் தங்கம் வென்றார்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்40-எப்41' பிரிவு பைனலில் ஹரியானாவின் நவ்தீப் சிங் (42.63 மீ,), பிரின்ஸ் (31.90 மீ.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப்46' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் சுந்தர் சிங் குஜ் ஜார் (64.53 மீ.,) தங்கப் பதக்கத்தை பற்றினார். 'டி35, டி37, டி42' பிரிவு பைனலில் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில், உ.பி.,யின் பிரீத்தி பால் (15  வினாடி )முதலிடம் பிடித்து தங்கம்  வென்றார். அடுத்த இருஇடங்களை குஜராத்தின் பினா (17.20 வினாடி), ஹரியானாவின்  அவானி (20.40 வினாடி) கைப்பற்றினர்.பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் 'டி12, டி13' பிரிவு பைனலில் உ.பி.,யின் சிம்ரன் (12.30 வினாடி) தங்கம் வென்றார். ' எப் 55, எப்56' பிரிவுஆண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் தமிழகத்தின் முத்துராஜா தங்கம் வென்றார். ஹரியானாவின் யோகேஷ் கதுனியா, ராமன் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 

Jul 12, 2025

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்.

  லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் ,முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 251/4 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா - பந்தில் பவுண்டரி அடித்த ரூட், சதம் கடந்தார். பும்ரா 'வேகத்தில்' ஸ்டோக்ஸ் (44) போல்டானார். தனது 21வது ஓவரை வீசிய பும்ரா, முதல் பந்தில் ரூட்டை (104) போல்டாக்கினார். அடுத்த பந்தில் வோக்சை, 'டக்' அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 271/7 என திணறியது.  இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145/3 ரன் எடுத்து, 242 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (53), ரிஷாப் (19) அவுட்டாகாமல் இருந்தனர்

Jul 12, 2025

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்.

விம்பிள்டன்கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில்ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். இதில் அல்காரஸ்  6-4, 5-7, 6-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தொடர்ந்து 3வது முறையாக (2023, 2024, 2025) பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், விம்பிள்டனில் 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர். இதில் சின்னர் 6-3, 6-3, 6-4 என வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் நெதர்லாந்தின் செம் வெர்பீக், செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, 7-6, 7-6 என பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி, பிரேசிலின் லுாயிசா ஸ்டெபானி ஜோடியை  வென்றது. அமெரிக்காவின் அனிசிமோவா, போலந்தின் ஸ்வியாடெக்பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று மோதுகின்றனர். இருவரும் முதன் முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறினர். இன்று வெற்றி பெறும் வீராங்கனை விம்பிள்டனில் முதல் கோப்பை வெல்லாம்.இதன்மூலம் விம்பிள்டனில் தொடர்ந்து 8வது ஆண்டாக பெண்கள் ஒற்றையரில் புதிய சாம்பியன் கிடைக்க உள்ளார். 

Jul 11, 2025

கிரிக்கெட் போட்டி july 10 th

நேற்று துவங்கிய லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்டில் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில்,. தொடர்ந்து மூன்றாவது முறையாக 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், தேர்வு செய்தார். இம்முறை பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில், பும்ரா இடம் பெற்றார்.இங்கிலாந்து அணியில்டங்க் நீக்கப்பட்டு  ஆர்ச்சர் சேர்க்க பட்டார். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் ,முதல் இன்னிங்சில் 251/4 ரன் எடுத்திருந்தது.  கிரிக்கெட் பெண்கள் ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி முதல் 3 போட்டி முடிவில் 2-1 என இந்தியா முன்னிலையில் இருந்தது. 4வது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் டாமி பியுமன்ட், பேட்டிங் தேர்வு செய்தார். 20 - ஓவரில் 126/7 ரன் மட்டும் எடுத்தது. 'சுழலில்' இந்தியாவின் ராதா 2, ஸ்ரீ சரணி 2, தீப்தி 1 விக்கெட் சாய்த்தனர்.இந்திய அணி 17 ஓவரில் 127/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா (24), ரிச்சா (7) அவுட்டாகாமல் இருந்தனர். 

Jul 11, 2025

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் .

ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில். 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். மொத்த பரிசுத் தொகை ரூ. 6 கோடி.'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.இத்தொடரின் 'நாக் அவுட்' முறையிலான இரண்டாவது சுற்று தற்போது நடக்கிறது. இந்தியாவின் ஹரிகா, சகவீராங்கனை நந்திதாவை எதிர்கொண்டார். இருவரும் மோதிய முதல் போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார் நந்திதா. இப்போட்டி 37வது நகர்த் தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹரிகா 1.5–0.5 என வெற்றி பெற்றார்.இந்தியாவின் வைஷாலி, கனடாவின் மெய்லி மற்றொரு போட்டியில் மோதினர்.இதில் இரு போட்டியிலும் வெற்றி பெற்ற வைஷாலி (2.0-0) மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய இளம் வீராங்கனை திவ்யா, 1.5–0.5 என ஜார் ஜியாவின் கெசரியாவை சாய்த்தார்.இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஹம்பி, உஸ்பெகிஸ்தானின் அப்ரு ஜாவை 1.5-0.5 என வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 

Jul 11, 2025

விம்பிள்டன் டென்னிஸ் முதன்முறையாக பைனலுக்குள் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறினார்கள்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில்,  பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 12வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா மோதினர். இரண்டு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் அனிசிமோவா 6-4, 4-6, 6-4 என வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்..மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர்.இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 பெற்று விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். 

Jul 10, 2025

வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் ரிஷாப், ஜோதி ஜோடி மொத்தம் 1431 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, புதிய உலக சாதனை .

உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 4) ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ,ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு தகுதிச்சுற்றில் 85 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் ரிஷாப் யாதவ் 718 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்தார். பெண்கள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி 715 புள்ளி எடுத்தார். கலப்பு அணிகள் பிரிவில் ரிஷாப், ஜோதி ஜோடி மொத்தம் 1431 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. இது புதிய உலக சாதனை ஆனது. அடுத்து அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் ஜோதி, பர்னீத் கவுர், பிரதிகா இடம் பெற்ற அணி, அரையிறுதியில் இத்தோனேஷியாவை சந்தித்தது.இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி 230-226 எனவெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் சீன தைபே அணியை சந்திக்க உள்ளது. ரிஷாப், பிரதமேஷ், அமன் இடம் பெற்ற இந்திய காம்பவுண்டு ஆண்கள் அணி, காலிறுதியில் 233-234 என பிரான்சிடம் தோல்வியடைந்தது.  

Jul 10, 2025

கிரிக்கெட் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று  லண்டன்,லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை தொடரும் பட்சத்தில், தொடர்ந்து இரண்டாவது வெற்றி பெறலாம்.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்டில் எழுச்சி பெற்ற இந்திய அணி, 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது, இன்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. 

Jul 10, 2025

ஆசிய கோப்பை  பெண்களுக்கான கால்பந்துதொடர்.

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் பெண்களுக்கான 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள முள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடந்தது.12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதன் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. காலிறுதிக்கு செல்லும் 8 அணிகள், 2027ல் பிரேசிலில் நடக்க உள்ள 'பிபா' பெண்கள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற.இத்தொடரில் 12 அணிகள் தலா 4 கொண்ட 3 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்- 2' அணிகளுடன், இரண்டாவது இடம் பெற்ற சிறந்த 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி வீராங்கனை ஸ்வீட்டி தேவி கூறியது: ஆசிய கோப்பை தொடருக்கு 23 ஆண்டுக்குப் பின் தகுதி பெற்றதை, இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை எனஇந்திய அணி வீராங்கனை ஸ்வீட்டி தேவி கூறினார்.” இதில்வார்த்தைகளால் விவரிக்க முடியாத, பல்வேறு உணர்வுகள் கலந்துள்ளன.பெண்கள் கால்பந்துக்கு ஆதரவு தருபவர் யாரும், எங்களது மகிழ்ச்சியை புரிந்து கொள்வர் “.“அடுத்து உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதுதான் எங்களது கனவு .அடுத்த இலக்கு” என ஸ்வீட்டி தேவி கூறினார். 

Jul 10, 2025

இந்தியா 'ஏ' ஹாக்கி அணி ,ஐரோப்பிய சுற்றுப்பயணம்.

 இந்தியா 'ஏ' ஹாக்கி அணி ,ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா, 8 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்துக்கு எதிராக தலா 2, இங்கிலாந்து, பெல்ஜியத்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் பங்கேற்கிறது.நெதர்லாந்தில் நடந்த முதல் போட்டியில் அயர் லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 'ஏ' அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 95 96

AD's



More News