நாளை மும்பையில் துவங்ககிரிக்கெட் பெண்கள் பிரிமியர் லீக் 'டி-20', 4வது சீசன், கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளஐந்து அணிகளின் கேப்டன்கள் ஆஷ்லே (குஜராத்), ஜெமிமா (டில்லி), ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை), ஸ்மிருதி (பெங்களூரு), மெக் லானிங் (உ.பி.,)
கோலாலம்பூரில் ரூ.13 கோடி பரிசுத் தொகைக்கான மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-16, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜியா ஹங் ஜாசன் டெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற நேர்செட்டில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற லீஜிஜியாவை (மலேசியா) தோற்கடித்தார்.இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத்பெண்கள் ஒற்றையரில் 11-21, 11-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.இந்தியாவின் எம்.ஆர். அர் ஜூன்- ஹரிகரன் அம்சகருணன் இணை 10-21, 20-22 என்ற நேர் செட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் ஹிரோகி மிடோரிகவா- கோஹியமாஷிதா ஜோடியிடம் தோற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில்,72-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள 30 ஆண்கள்அணிகளும், 28 பெண்கள் அணிகளும் தலா 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள்லீக்கில் மோதி வருகின்றன.'எப்' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக பெண்கள் அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஜார்கண்டை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 25-7, 25-11, 25-7 என்ற செட் கணக்கில் ஜார்கண்டை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது. . தமிழக பெண்கள் அணி, இன்றுநடைபெறும் கடைசி ஆட்டத்தில் ,மராட்டியத்தை எதிர்கொள்கிறது.
பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ,பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 'இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மலிகா எல் கராக்சியை எதிர்கொண்டார். முதல் செட் 11-8, 2 வது செட் 11-7, மூன்றாவது செட் 11-9, என போட்டியின் முடிவில் அனாஹத் சிங், 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 17 வயது வீராங்கனை அனாஹத் சிங், பிரிட்டிஷ் ஓபன் தொடரின் 19 வயது பிரிவில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ் அணி, சூர்மா அணியை சந்தித்தது., முதல் பாதியில் 2-0 , முடிவில் தமிழக டிரா கன்ஸ் அணி 3-2 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. பெண்களுக்கான, நேற்று நடந்த லீக் போட்டி ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில், பெங்கால் டைகர்ஸ், எஸ்.ஜி., பைபர்ஸ் அணிகள் மோதின. இப் போட்டி கோல்எதுவுமின்றி (0-0) சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முடிவில் ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. அடுத்து 'ஷூட் ஆப்' நடந்தது. 7-6 என்ற கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ,முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஜன. 18ல் மெல்போர்னில் துவங்குகிறது. ஒற்றையரில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.25.22 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.ஜன. 9ல் பெண்கள்பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது.டில்லி அணி கேப்டன் ஜெமிமா25, கூறுகை யில், ''அணிக்கு தலைமை ஏற்பது, சிறப்பாக செயல்பட,. ஏற்கனவே மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம், கைகொடுக்கும்," என்றார். சர்வதேச 'டி-20' தரவரிசை பட்டியலில் பெண்களுக்கான ,இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 2 இடம் முன்னேறி, 13வது இடம் ,பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி, 2வது இடம் பிடித்தனர்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' குஜராத்தின் வதோதராவில், 17 வயது பிரிவில் ரூபம், சின்ட்ரல்லா, 15 வயது பிரிவில் ஆதித்யா,13வயது பிரிவில் பிரனவ், திவிஜா என இந்திய நட்சத்திரங்கள் வென்றனர். இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் மிகு மட்சுஷிமா ,நேற்று 19 வயது பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர்.. முடிவில் திவ்யான்ஷி, 2-3 என்ற செட்கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 2-3இந்தியாவின் ஸ்ரீஜனி, தனிஷ்கா 15 வயது பிரிவு பெண்கள் பைனலில் மோதி,. இதில் ஸ்ரீஜனி 3-2 (8-11, 11-8, 7-11, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்..இந்திய வீரர்கள் பிரியானுஜ், சர்தாக் ஆர்யா ஆண்கள் ஒற்றையர் (19 வயது) பிரிவு பைனலில் மோதினர். இதில் பிரியானுஜ் 3-0 என்ற (12-10, 11-8, 14-12) நேர் செட்டில் வென்று, சாம்பியன் ஆனார்.
பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில்,.நேற்று ஹரியானாவின் சூர்மா, ராஞ்சி ராய்ல்ஸ் அணிகள் மோதின. இதில் சூர்மா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சூர்மா அணிக்கு பென்னி (1 வது நிமிடம்), ஒலிவியா (39) தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா லீக் 7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கான ஹாக்கியில் ,மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் டில்லி, எச்.ஐ.எல்., கவர்னரிங் கவுன்சில் அணிகள் மோதின. எச்.ஐ.எல்., அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2011ல் அறிமுகமான வீராங்கனை சவிதா புனியா, 35 இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் எதிரணியின் கோல் வாய்ப்புகளை துடிப்பாக தடுப்பதால், 'பெருஞ்சுவர்' என அழைக்கப்படுகிறார். இந்தியா 4வது இடம் பெற முக்கிய காரணமாகடோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) சவிதா புனியா. ஜப்பானில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு (செப்.19-அக்.4), ஹாக்கியில் ,தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்கு. இதன் மூலம் 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெறலாம். 'சீனியர்' வீராங்கனை என்ற முறையில், அணிக்கு தேவையான ஊக்கம் அளிப்பேன். தங்கம் வெல்வதற்கான திறமை நமது அணியிடம் உள்ளது என்றார்..
11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் நேற்று பங்கேற்றனர். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, கடலோர காவல்படை (கிழக்கு மண்டலம்)கமாண்டர் தத்விந்தர்சிங் சைனி, சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர்விஸ்வநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.