25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத் தப்படுகிறது. இதன் 18வது சீசன்  ஆரம்பம்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத் தப்படுகிறது. இதன் 18வது சீசன்  ஆரம்பம்...

பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத் தப்படுகிறது. இதன் 18வது சீசன் நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. பைனல் வரும் மே 25ல் நடக்க உள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. 

ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) வாங்கப்பட்ட கேப்டன் ரிஷாப்பன்ட் தான் ,லக்னோ அணியின் பலம். மிட்ஸல் மார்ஷ், மார்க்ரம், பூரன், மில்லர் என உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே ஓவரில் முடிவு தலைகீழாக மாறும்,ஐ.பி.எல்., போட்டியில் கோப்பை வெல்லும் அணியை கணிப்பது கடினம். கடைசி பந்து வரை பதட்டப்படாமல் செயல்படும் அணிக்கே கோப்பை வசப்படும். 

சென்னை அணிக்காக 43 வயதிலும் 'தல' தோனி விளையாட இருப்பது சிறப்பு. 

ஐ.பி.எல்.,தொடர் 13 மைதானங்களில் நடக்க உள்ளது. முதன் முறையாக அனைத்து மைதானத்திலும் முதல் போட்டி துவங்கும் முன் அல்லது போட்டிக்கு இடையில் துவக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 6:00 மணிக்கு துவக்க விழா நடக்கும். இதில் பாலிவுட் நடிகை திஷா படானி, பாடகி ஷ்ரேயா கோஷல் பங்கேற்கின்றனர். 

ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி, இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடி வழங்கப்படும் 3, 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி தரப்படும்.  

ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை, மும்பை முதலிடத்தில் உள்ளன. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News