25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஏப்ரல் மாதங்களில் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான  டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏப்ரல் மாதங்களில் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

கோடை விடுமுறை காலத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள். ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே தேர்வு செய்வார்கள். 120 நாட்களாக இருந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதங்களில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்துக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலை தாண்டியுள்ளது. அதேநேரத்தில், குளிர்சாதன வசதிகொண்ட பெட்டிகளில் டிக்கெட்கள் காலியாக இருக்கின்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News