25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தலைமுடிக்கும், சருமத்துக்கும் ஆரஞ்சு பழத்தோல், பவுடர் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலைமுடிக்கும், சருமத்துக்கும் ஆரஞ்சு பழத்தோல், பவுடர் 

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் வழி வகுக்கும்.பல்வலியால் அவதிப்படுபவர்கள், ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வலி குறையும்.. தலைமுடி உதிர்வது அதிகமாக இருந்தால், தினம்1 ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம். முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் இது வழி வகுக்கக் செய்யும்.குளிர்காலத்தில் மந்தமான சருமம், வறண்ட கூந்தல் இப்படியான பிரச்சனைகள் இருந்தாலும், ஆரஞ்சு பழமே நமக்கு பயன்படுகிறது.  நம்முடைய சருமத்துக்கு கவசம் போல ஆரஞ்சு தோல் உதவுகிறது ஆரஞ்சு தோல் பவுடரை, சருமத்துக்கு பேக் போல போடுவார்கள். இதனால், இறந்த செல்களை நீக்கி, சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் திகழும். பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும் சரி, சருமத்தில் சுருக்கம் இருந்தாலும் சரி, எண்ணெய் பசை இருந்தாலும்சரி, மொத்தத்துக்கும் இந்த ஆரஞ்சு தோல் பவுடர்தான் மருந்தாகிறது. எனவே, ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்தும் வரலாம். அல்லது இந்த பொடியில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்தும் வரலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News