25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்ட
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்ட

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (22.10.2024) நடைபெற்ற  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்
 முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதன்மைச்  செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர்/ அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள்  திரு.க.அசோகன், திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரு.உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜு, திரு.மு.பெ.கிரி, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.துரை.சந்திரசேகரன், திரு.ம.சிந்தனை செல்வன், திரு.வி.பி.நாகைமாலி, திரு.த.வேலு, முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் தணிக்கைப் பத்திகள் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடன்  விவாதித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்  ஆகிய துறைகளில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையின் வினாக்களுக்கான தணிக்கைப் பத்திகள் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பொது நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை பொது நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதிமேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.மேலும், பொது நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும், தற்போது செயல்பாட்டில் உள்ள  புதிய திட்டங்களின் நிலை குறித்தும் தொடர்புடைய அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) (பொ) திரு.தருண்குமார்,இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, கோட்டாட்சியர்கள், பொது நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News