25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU)  மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU) மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி  அறையில் (24.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர்) மற்றும் திரு.அனுப்குமார் யாதவ்,I A S., அவர்கள்(206-விருதுநகர் மற்றும் 207-அருப்புக்கோட்டை) மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணிகள் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு 322 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 349 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369  வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 400 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள  291 வாக்குச்சாவடி மையங்களுக்கு  349 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  378 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள  288 வாக்குச்சாவடி மையங்களுக்கு  345 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  374 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,

          206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள  281 வாக்குச்சாவடி மையங்களுக்கு  337 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  365 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள  270 வாக்குச்சாவடி மையங்களுக்கு  324 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  351 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள  292 வாக்குச்சாவடி மையங்களுக்கு  350 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், என மொத்தம் மாவட்டத்தில்  உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU)  மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News