25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  தேர்வு எழுதிய  ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  தேர்வு எழுதிய  ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

2023 மார்ச்சில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  தேர்வு எழுதிய  ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 58  மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். (100% தேர்ச்சி)

 பள்ளியில் S. ஆதித்திர அய்யனார் 583/ 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவர் பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள்  பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

 மாணவர் M. லக்ஷ்மண் 581/ 600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இயற்பியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 மாணவி M. லோச்சனா சிவப்பிரியா 577/ 600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், ஆங்கிலத்தில் நூற்றுக்கு 98 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.

 மேலும் மாணவர்கள் M. சிவரஞ்சனி, S. துவாரகேஷ்  மற்றும் P. ரோஹித்ராம் கணிப்பொறி அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், வேதியியலில்   C.விஷ்வா R.S.கௌசிகா மற்றும் M. சண்முக தர்ஷினி ஆகியோர் நூற்றுக்கு 99 மதிப்பெண்களையும், உயிரியல் பாடப்பிரிவில் மாணவி K.பிரதிக்ஷா நூற்றுக்கு 99 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

 தேர்வு எழுதிய மாணவர்களில் 36 பேர் 75 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News