25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு

இராஜபாளையம் நகரில் அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்த அறிவிப்பை கொடுத்தும், கண்காணிப்பின்றி குறையாத பழக்கத்தினால் நீர் வரத்து தடங்களில் அடைப்பு ஏற்படுவதுடன் நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

ஆரம்பத்தில் இது குறித்து வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தவிர்க்குமாறும், உபயோகம் கண்டறிந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இவற்றையும் மீறிமார்க்கெட்,பூக்கடை,இறைச்சிகடைகள்,ஓட்டல்கள்,ரோட்டோரகையேந்திபவன்கள் என அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது .பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீர் வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், சாக்கடைகளில் கொட்டப்படுகின்றன.

இவை மழைகாலங்களில் ரோட்டோர வடிகாலை விட்டு சாக்கடைநீர் நடை பாதைகளில் தேங்கி நிற்பதும், கொசு உற்பத்திக்கும் ஏதுவாக மாறி வருகிறது. கடைகளில் விவசாயிகளுக்கு ஆதாரமான கண்மாய்களில் மலையளவு குவிந்து கேட்பாரற்ற நிலைக்கு விவசாயிகளை தள்ளி விடுகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து தடை செய்வதுடன் தொடர் அபராத நடவடிக்கைகளை பின் பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News