விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 6.00 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று (03.01.2023) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி , I A S அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும். இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும். தலா 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- ரொக்கத்துடன், ஒரு முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 5.99,224 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 1018 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களும் என ஆகமொத்தம் குடும்பங்களுக்கும் மேற்படி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வழங்கும் வகையில், (03.01.2023) முதல் வரும் 08.01.2023 வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேசன் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும். அனைத்து ரேசன் கடைகளிலும், வரும் 09.01.2023 முதல் 13.01.2023 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேரம் விபரத்தின்படி குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடைக்குச் சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் எவ்வித சிரமம் இன்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply