25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கோடைகாலங்களில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடைகாலங்களில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலங்களில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.இ.வ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியானது 2021 ஆம் ஆண்டு இந்திய அரசால் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குறிப்பாக மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரை ஏற்படும் வறட்சி காரணமாக காட்டுத் தீ ஏற்படுகிறது.2023-ஆம் ஆண்டு 26 முறையும், 2024-ஆம் ஆண்டு தற்போது வரை 7 முறையும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வனப் பகுதியில் கால்நடை மேய்ச்சல், மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் சிறு வன பொருட்கள் சேகரம் செய்தல், சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைதல், வனப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், தனியார் ஏலத் தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போன்ற காரணிகளால் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்காக தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும், வனத்துறையில் உள்ள வனச்சரகங்களிலும் தலா 3 தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கபட்டும் உள்ளனர்.

மேலும், காட்டுத் தீ தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் வனப்பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், காட்டுத் தீ ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும்.மேய்ச்சல் செல்வோர் மற்றும் தனியார் தோட்டங்களில் பணிபுரிவோர் ஆகியோரிடம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, இந்து சமய அறநிலையத்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட துறைகள் காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News